எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
nசென்னை, ஜன.30 - விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்ததில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஸ்வரூபம் படம் கடந்த 25-ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் காட்சி படத்தில் உள்ளதாக கூறிய தமிழக அரசு நடிகர் கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் விஸ்வரூபம் படம் தடை செய்யப்படவில்லை. அங்கு படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழக அரசின் தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் 2வது நாளாக நேற்று காலை 11.45-க்கு விசாரணை தொடங்கியது.
அப்போது, நடிகர் கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான , வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு தரப்பு வக்கீல் வாதத்திற்கு பதிலளித்தார். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது அரசின் கடமை என்றும் வன்முறை, அச்சுறுத்தல் மூலமாக பேச்சு, கருத்து சுதந்திரத்தை பறிக்க முடியாது என்றும் விளக்கம் அளித்து வாதாடினார். விஸ்வரூபம் திரைப்படத்தை எச்சரிக்கை வாசகத்துடன் வெளியிட கர்நாடக அரசு அனுமதியளித்துள்ளதாகவும், அனைத்து இஸ்லாமியரும் தீவிரவாதி அல்ல என்ற வாசகத்துடனும், யாருடைய மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல என்ற வரிகளுடனும் கர்நாடகத்தில் விஸ்வரூபத்தை வெளியிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்திய முஸ்லிம்களை பற்றி எந்த வகையிலும் படத்தில் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய வழக்கறிஞர், படத்துக்கு அரசு தடை விதித்துள்ளதால் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திரைப்பட சட்டவிதியின்படி தணிக்கை குழுவிற்கு பிறகு மாநில அரசு காட்சியை நீக்க முடியாது என்றும் கமல்ஹாசன் வழக்கறிஞர் கூறினார்.
கேரளா, ஆந்திராவில் விஸ்வரூபம் படம் வெற்றிகரமாக ஓடுகிறது என்றும் அம்மாநில இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படத்தை விரும்புகிறார்கள் என்றும் கமல்ஹாசன் வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் படத்தில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக கூறப்படவில்லை என்றும், தீவிரவாதத்தை எதிர்ப்பதாகவே காட்சிகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். அப்போது, விஸ்வரூபம் படம் தணிக்கை செய்யப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சட்டத்துக்கு உட்பட்டு படத்தை தணிக்கை செய்யப்படவில்லை என்றும் தணிக்கை சான்று விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் வாதிட்டார்.
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தணிக்கைத்துறை சட்டப்படி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.
படத்தை பரிசீலனைக்குழு தான் பார்த்தது. தணிக்கைக்குழு அதிகாரிகள் படத்தை பார்க்கும்போது மனதை செலுத்தவில்லை. தணிக்கைக்குழு தான் சான்றிதழ் தர முடியுமே தவிர ஆய்வுக்குழு வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.
மாநில அரசின் தடை குறித்து குறிப்பிடுகையில், அரசியல் அமைப்பு சட்டப்படி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் பாதுகாப்பு தருவது மாநில அரசின் கடமை என்றும், அப்படி அமைதிக்கு பாதகம் ஏற்படும் என்று வந்தவுடன் 144 தடை உத்தரவு அமல்படுத்துவதில் சட்டத்தில் இடம் உண்டு என்றும், அதன்படியே இப்படத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் அரசு அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறினார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளித்து ரிலீஸ் செய்ய அனுமதித்து விட்டால் ஒரு மாநில அரசு அந்த ஆணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறினார். மேலும் ஒரு படத்தை பார்வையிட பரிசீலனைக்குழு அமைக்க தணிக்கைக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி பரிசீலனைக்குழு இப்படத்தை பார்த்தது என்றார்.
இதையடுத்து முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடினார். இஸ்லாமிய இனம் என்பது ஓரே இனம் தான். ஆப்கான் முஸ்லிம், நியூயார்க் முஸ்லிம் என்று தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. படத்தில் குரான் பற்றிய விமர்சனம் உள்ளது. அதை வேறு அர்த்தத்தில் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். சிறுவர்களை மனித வெடிகுண்டாக காட்டுகின்றனர் என்றார்.
அப்போது நீதிபதி கே.வெங்கட்ராமன் குறுக்கிட்டு, இந்தியாவில் இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தை ஆதரித்தது கிடையாது. தமிழகத்தில் மத நல்லிணக்கத்துடன் தான் வாழ்கின்றனர் என்றார். அப்போது பி.எஸ்.ராமன் குறுக்கிட்டு, அனைத்து முஸ்லிம்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடையாது என்றும், படத்தில் தீவிரவாதத்தை எதிர்ப்பதாகவே காட்சி உள்ளது என்றும் கூறினார்.
இதன்பின் அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் என மாலை 6 மணி வரை விசாரணை நீடித்தது.
பின்னர் நீதிபதி, இரவு 8.30-க்கு தீர்ப்பு அளிப்பதாகக் கூறினார். தீர்ப்பு இல்லாவிட்டால் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார். இதன்பின் இரவு 8.30 மணிக்கு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தகவலின்படி இரவு 10.30 மணிக்கு முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
நீதிமன்றம் வழங்கவிருக்கும் இந்தத் தீர்ப்பு கமல் ரசிகர்கள் மட்டுமல்லாது, நாடெங்கும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.