முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் சமாதியில் ஜனாதிபதி - பிரதமர் - சோனியா அஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.22 - முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சமாதியில் ஜனாதிபதி, பிரதமர்,காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 22 வது நினவு தினம் கொடுஞ்செயல் ஒழிப்பு தினமாக நாடுமுழுவது ம் அனுஷ்டிக்கப்பட்டது. டெல்லியில் ராஜீவ்காந்தி சமாதி அமைந்துள்ள வீர்பூமியில் ஜனாதிபதி. துணை ஜனாதிபதி, பிரதமர், சோனியாகாந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சோனியாவுடன் அவரது மகனும் காங்கிரஸ் துணைத்தலைவருமான ராகுல்காந்தி, மகள் பிரியங்கா,மருமகன் ராபர் வதேராஆகியோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். 

அப்போது அங்கு காந்தி மந்திரம் இசைக்கப்பட்டது. இளைஞர்கள் கையில் மூவர்ணகொடி ஏந்தி வந்தனர். ஏராளமான பள்ளிச்சிறார்களும் ராஜீவ்காந்தி சமாதியில்  மலர்தூவி அஞசலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்