எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஜூலை.19 - சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சி.பெருமாள் நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அதிமுகவின் தீவிர விசுவாசியான அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டி கிராமத்திற்கு நேற்று மாலை நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக கடந்த தேர்தலில் சி.பெருமாள்(62) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியாகும். இவரது மனைவி சரோஜா(52). இவர்களுக்கு ராஜேஷ்கண்ணா(37),தினேஷ் கண்ணா(36),சதீஷ்(30),கார்த்தி(28) ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.நேற்று அதிகாலை 4 மணிக்கு வாழப்பாடியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பெருமாள் எம்.எல்.ஏ.விற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை சேலம் 5 ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் காலை 6.15 மணியளவில் இறந்து போனார். அவர் இறந்த செய்தி அறிந்த நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் விஜயலட்சுமி பழனிசாமி,எஸ்.கே.செல்வம்,எம்.கே.செல்வராஜ்,ஜி.வெங்கடாஜலம்,பல்பாக்கி கிருஷ்ணன், மற்றும் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினர் பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அதிமுகவினரும், ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுகவின் தீவிர விசுவாசியான அவர் இறந்த செய்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இறுதி அஞ்சலி செலுத்த பாப்பநாயக்கன்பட்டிக்கு வருவதாக தெரிவித்தார். அதன்படி நேற்று மாலை 3 மணியளவில் கொடநாட்டில் இருந்துஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்து இறங்கினார்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் சுமார் 80 கி.மீ.தூரம் உள்ள பாப்பநாயக்கன்பட்டிக்கு கார் மூலம் 6.05 மணிக்கு வந்தார். எம்.எல்.ஏ.பெருமாளின் வீட்டிற்கு சென்று அங்கு கண்ணாடி பேழையில் வைக்கப்படிருந்த அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு அழுது கொண்டிருந்த எம்.எல்.ஏ.வின் மனைவி சரோஜா மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது எம்.எல்.ஏ.பெருமாளின் மனைவி சரோஜா முதல்வர் ஜெயலலிதாவை கண்டதும் கதறி அழுது அவரது காலில் விழுந்து அழுது புரண்டார். அவரை தூக்கி கையை பிடித்து அரவணைத்த முதல்வர் அவருக்கு ஆறுமுதல் கூறினார்.அப்போது அவர் எனது குடும்பத்திற்கு இனி யாருமே இல்லை என்ன? செய்வேன் என்று கூறி கண்ணீர் விட்டார். இதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா எதற்காகவும் கவலை படவேண்டாம் நான் இருக்கிறேன். நான் பார்த்துக்கொள்கிறேன் என ஆறுதல் கூறினார்.பின்னர் அங்கு கூடியிருந்த அமைச்சர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.பின்னர் அங்கு கூடியிருந்த பல்லாயிர கணக்கான மக்களை பார்த்து கும்பிட்ட முதல்வர் காரில் ஏறி சேலம், சங்ககிரி வழியாக கொடநாட்டிற்கு காரில் சென்றார்.
இறந்து போன பெருமாள் எம்.எல்.ஏ.வின் உடலுக்கு சபாநாயகர் தனபால்,துணை சபா நாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம்,நத்தம் விஸ்வநாதன்,கே.பி.முனுசாமி,சி.பி.வைத்திலிங்கம்,எடப்பாடி கே.பழனிசாமி,பழனியப்பன்,தாமோதரன்,கே.வி.ராமலிங்கம்,எஸ்.பி.வேலுமணி,செந்தில் பாலாஜி,பா.வளர்மதி,பா.மோகன், சுப்பிரமணியம்,சின்னையா,எம்.சி.சம்பத்,வைகை செல்வன்,தங்கமணி,தோப்பு வெங்கடாஜலம்,ஆனந்தன்,பூனாட்சி, அரசு கொறடா மனோகரன், எம்.எல்.ஏ.க்கள் விஜயலட்சுமி பழனிசாமி,எம்.கே.செல்வராஜ்,எஸ்.கே.செல்வம்,ஜி.வெங்கடாஜலம்,பல்பாக்கி கிருஷ்ணன்,மாதேஸ்வரன், தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.சேந்தமங்கலம் சாந்தி, அரூர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.டில்லி பாபு,சேலம் கலெக்டர் மகரபூஷணன்,மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சதீஷ்குமார்,சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்பட ஏராளமான அதிமுகவினரும்,பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அவரது சொந்த தோட்டத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
வாழ்க்கை குறிப்பு
மரணமடைந்த அதிமுக எம்.எல்.ஏ.சி.பெருமாள் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது தன்னை அதில் இணைத்துக் கொண்டவர் ஆத்தூர் மற்றும் வாழப்பாடி பகுதியில் போஸ்ட் ஆபீசில் கிளர்க்காக வாழ்க்கை தொடங்கி அவர் 1984 ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் கிளர்க்கா பணியாற்றி உள்ளார்.பின்னர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு 1984 ல் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அப்போது தோல்வியை தழுவினார்.1989 ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தில் மீண்டும் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவின் ஆத்தூர் வட்டார செயலாளராக இருந்த அவர் எம்.எல்.ஏ.ஆன பின்பு 1989 ல் சேலம் மாவட்ட துணைச் செயலாளர் ஆனார். பின்னர் 1991 ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆனார். 2001 தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.மீண்டும் 2011 ம் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்ட பெருமாள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆனார்.தற்போது ஏற்காடு தொகுதியின் செயலாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இவரது மூத்த மகன் ராஜேஷ் கண்ணா சேலம் புறநகர் மாவட்ட பாசறை துணைச் செயலாளராக உள்ளார். இதில் 3 மகன்களுக்கு திருமணம் நடைப்பெற்றுவிட்டது.
ஜெ.வின் தீவிர விசுவாசி
மறைந்த ஏற்காடு எம்.எல்.ஏ.பெருமாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாவார்.1989 ல் இவர் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட போது ஏற்காடு தொகுதியில்தான் வாக்கு எண்ணிக்கை முதலில் முடிக்கப்பட்டு இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதே போல் 1991 மற்றும் 2011 லும் இவருக்கு முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பளித்தார். தொகுதி மக்களிடையே நல்ல பெயர் பெற்றுள்ள பஸ்சில்தான் சென்று வருவாராம். இந்த முறை வெற்றி பெற்ற பின்புதான் லோன் மூலம் கார் வாங்கினார். அந்த காரின் நெம்பர் கூட டி.என்.77 ஜெ.7777 ஆகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை2 days 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்6 days 1 min ago |
மினி பான் கேக்1 week 2 days ago |
-
ஈரானிய இயக்குநருக்கு 8 ஆண்டு சிறை
09 May 2024டெக்ரான்:ஈரானிய இயக்குநருக்கு சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 12-ம் தேதி 7 மாவட்டங்களில் மழை பெய்யும்: தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
09 May 2024சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.பி.எல்.லில் 7-வது வெற்றியை பதிவுசெய்யுமா சென்னை அணி? குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை
09 May 2024தர்மசாலா:ஐ.பி.எல்.லில் 7-வது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி என்ற ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நிலையில், பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க
-
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான தடையை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தக்கோரி மனு: பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
09 May 2024சென்னை, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2024.
10 May 2024 -
வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாட்கள் 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
09 May 2024சென்னை, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாட்கள் 1,200 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
-
ம.பி.யில் தீயில் எரிந்த இ.வி.எம்: நான்கு வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு
09 May 2024போபால், மத்திய பிரதேசத்தில் தீயில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்ததை அடுத்து பெதுல் மக்களவை தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது
-
தமிழகத்தில் சுட்டெரித்த வெயில்:12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி பதிவான வெப்பம்
09 May 2024சென்னை: தமிழகத்தில் நேற்று சுட்டெரித்த வெயிலால் 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது.
-
தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமருக்கு உரிமை இல்லை முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆவேசம்
09 May 2024ஐதராபாத்:தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு எந்த உரிமையும் இல்லை என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை ரூ.120 குறைவு
09 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், நேற்று மேலும் குறைந்தது.
-
அரியாணாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு சிக்கல்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி கவர்னருக்கு ஜே.ஜே.பி. கடிதம்
09 May 2024சண்டிகர், அரியாணாவில் பா.ஜ.க.
-
பொய்யைக் கண்டறியும் இயந்திரமே நின்றுவிடும்: பிரதமர் நரேந்திரமோடி குறித்து ஆர்ஜேடி தலைவர் விமர்சனம்
09 May 2024பாட்னா, பொய் பேசுவதைக் கண்டறியும் இயந்திரம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் வைத்தால், அவர் பேசும் பொய்களைக் கேட்டு இயந்திரமே நின்றுவிடும் என்ற
-
கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது: தலைமை செயலாளர் மீண்டும் எச்சரிக்கை
09 May 2024சென்னை, தமிழகம் முழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோடை விடுமுறையில் சிறப்பு
-
சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற பரிசீலிக்குமாறு சிறைத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
09 May 2024சென்னை:யூடியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எ
-
ஐதராபாத்திடம் லக்னோ அணி தோல்வி :நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முதலாவதாக வெளியேறிய மும்பை
09 May 2024மும்பை: ஐதராபாத்திற்கு எதிரான தோல்வி காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முதல் அணியாக மும்பை அணி வெளியேறியுள்ளது.
-
விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது:ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டார் பிரேமலதா
09 May 2024புதுடெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடந்த 2ம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரெளபதி ம
-
பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு:பாகிஸ்தானில் 7 பேர் பலி
09 May 2024இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திற்கு அருகில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
ஐ.பி.எல். வரலாற்றில் ஐதராபாத் படைத்த 2 சாதனைகள்
09 May 2024ஐதராபாத்: டி20 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 புதிய சாதனைகளை படைத்துள்ளது.
166 ரன்கள் இலக்கு...
-
பார்லி. 4-ம் கட்ட தேர்தல்: உ.பி. உள்ளிட்ட 10 மாநிலங்களில் தீவிர பிரசாரத்தில் தலைவர்கள்
09 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு உ.பி. உள்ளிட்ட 10 மாநிலங்களில் அனல்பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
-
அரசியலமைப்பு குறித்து பேச்சு:ராகுல் மீது மத்திய அமைச்சர் புகார்
09 May 2024புதுடெல்லி:பா.ஜ.க. அரசியலமைப்பை மாற்றிவிடும் என்று ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
-
அதிரடியான பேட்டிங்: டிராவிஸ் ஹெட்
09 May 2024ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 57ஆவது போட்டியில், லக்னெள அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை,9.4 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ்
-
கேதர்நாத் யாத்திரை இன்று தொடக்கம்
09 May 2024டேராடூன், ‘சார் தாம்’ யாத்திரையை முன்னிட்டு கேதர்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ளது.
-
டி-20-யில் 12 ரன்னில் ஆல்அவுட்: மங்கோலியா மோசமான சாதனை
09 May 2024கேப்டவுன்: டி-20-யில் 12 ரன்களில் ஆல்அவுடாகி மங்கோலியா மோசமான சாதனை படைத்துள்ளது.
மங்கோலியா அணி...
-
காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறி விட்டனர் : மாலத்தீவு அரசு தகவல்
10 May 2024மாலே : கெடு முடியும் முன்பே மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
10 May 2024அணிகள் போட்டிகள