எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூன்- .13 - தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று 2 நாள் பயணமாக தலைநகர் டெல்லிக்கு பயணமாகிறார். இந்த பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகிறது. தி.மு.க. - காங்கிரஸ் இடையே கசப்புணர்வு தோன்றி விட்ட நிலையில் ஜெயலலிதா இன்று டெல்லிக்கு செல்வதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பிறகு மே 13 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 147 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் 203 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. 29 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. 21 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்ததோடு எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து விட்டது. இதன் காரணமாக தமிழக சட்டசபையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். அவரது கட்சிக்கு இப்போது அங்கீகாரமும் கிடைத்து விட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு மூன்றாவது முறையாக தமிழகத்தில் பதவியேற்றது. அவருடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற அன்றே கோட்டைக்கு சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா 20 கிலோ இலவச அரிசி, ஏழைப் பெண்களுக்கு 4 கிராம் தாலிக்கு தங்கம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட 7 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதன் பிறகு பல முறை அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரும் நடந்து முடிந்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று 2 நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு அதாவது முதல்வராக பதவியேற்ற பிறகு ஜெயலலிதா டெல்லி செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி செல்லும் ஜெயலலிதா அங்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கிறார்.
இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் தமிழக சட்டசபையில் சமீபத்தில்தான் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் முதல்வர் ஜெயலிலதா டெல்லியில் பிரதமரை சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசவுள்ளார். மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பிரதமருடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்துகிறார். சட்டசபை தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். எனவே டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்திக்கக்கூடும்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. மத்திய மந்திரியாக இருந்த ஆ. ராசா கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி லஞ்சப் பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக கருணாநிதி மகள் கனிமொழியும் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் இருக்கிறார். இவரது ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி கனிமொழி மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. கனிமொழி கைது செய்யப்பட்ட விஷயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் அப்செட்டாகி உள்ளார்.
காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளவும் அவர் தயாராக இருக்கிறார். ஆனால் சில தி.மு.க. தலைவர்கள் அதை விரும்பவில்லையாம். காரணம், ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு தி.மு.க. மத்திய அமைச்சர்கள் பதவி விலகும் பட்சத்தில் தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு, மு.க. அழகிரி மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாம் என்று சில தி.மு.க தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த அச்சம் தி.மு.க. உயர்நிலைக் கூட்டத்தில் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டதாம். அதனால்தான் மத்திய அமைச்சர்கள் விலகும் முடிவு ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இருந்தாலும், காங்கிரஸ் மீது கருணாநிதி கடும் கோபத்தில் இருக்கிறாராம்.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில்தான் தமிழக முதல்வர் ஜெயலிலதா டெல்லிக்கு செல்கிறார். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்த நிலையில் ஜெயலலிதா டெல்லிக்கு செல்கிறார். ஆகவே அவரது இந்த 2 நாள் அரசியல் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. காங்கிரஸ் இடையே கடந்த 10 ஆண்டு காலமாக உறவு இல்லாமல் இருந்து வந்தது. காங்கிரசுக்கு அ.தி.மு.க தலைமை பல முறை நேசக்கரம் நீட்டியும் அதை காங்கிரஸ் கட்சி பொருட்படுத்தாமல் இருந்தது. ஆனால் இப்போது அ.தி.மு.க.வின் அருமை அவர்களுக்கு புரிந்து விட்டது போலும். ஆகவே, அ.தி.மு.க.வுடன் அவர்களாகவே வலிய வந்து நேசக்கரம் நீட்டினாலும் ஆச்சரியமில்லை. எது எப்படியோ, ஜெயலலிதா டெல்லி சென்று வந்த பிறகு சில மாறுதல் காட்சிகள் கண்ணுக்குத் தெரியும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
02 May 2024பாட்னா : இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
02 May 2024புதுடில்லி : அரசுப் பணிகளை ஒழித்து தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ.க.