எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.1 - இன்று முதல் 18 புதிய ரயில்கள் படிப்படியாக இயக்கப்படுகின்றன. இதில் மதுரை - சென்னைக்கு நான்ஸ்டாப் ரயில் இயக்கப்படுகிறது. வாரம் இருமுறை இயக்கப்பட்ட சென்னை - திருச்செந்தூர் ரயில் தினசரி ஓடும்.
இது குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுகிறது. இது வாரம் இருமுறை இயக்கப்படும். இடையில் எந்த இடத்திலும் நிற்காது. அதே போல் சென்னை - திருவனந்தபுரத்திற்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட துரந்தோ எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை இயக்கப்படும். இந்த ரயிலும் நான்ஸ்டாப் ரயிலாகும். அதே போல கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு திப்ருகார் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது. இது கோட்டயம், கோயம்புத்தூர், காட்பாடி ஆகிய வழிகளில் செல்லும். இது வாரம் ஒருமுறை இயக்கப்படும்.
இந்த மூன்று ரயில்களும் அறிமுகப்படுத்தக் கூடிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். சென்னையில் இருந்து சீரடிக்கு அதிவேக ரயில் இயக்கப்படவுள்ளது. இதுவும் வாரம் ஒரு முறை இயக்கப்படும். அதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு அதிவேக ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படும். பாண்டிச்சேரியில் இருந்து புதுடெல்லிக்கு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் தோறும் விடப்படும். முதல் ரயில் இம்மாதம் 3 ம் தேதி டெல்லியில் புறப்படும். மொத்தம் 18 ரயில்கள் விடப்படுகின்றன. இவை படிப்படியாக விடப்படும்.
தென்னக ரயில்வேயில் 220 ரயில்கள் இயக்கப்படுகின்றன. மின்சார ரயில் 700 முறை இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 69 கோடி பேர் ரயிலில் பயணம் செய்தனர். நடப்பாண்டில் 73 கோடியே 77 லட்சம் பயணிகள் பயணம் செய்யவுள்ளனர். கடந்த ஆண்டு ரூ. 2 ஆயிரத்து 49 கோடி தென்னக ரயில்வேயில் வருவாயாக கிடைத்துள்ளது. தென்னக ரயில்வேயில் 2 ஆயிரத்து 230 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அது தற்போது ஆயிரத்து 651 சிறப்பு ரயில்களாக குறைக்கப்பட்டுள்ளது. காரணம், மற்ற ரயில்கள் நிரந்தர ரயில்களாக மாற்றப்பட்டு விட்டன.
பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. ஆயிரத்து 700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கரப்பான்பூச்சி போன்றவைகளால் பயணிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அவை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரி செய்யப்பட வழிவகை செய்யப்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக அறிவிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் கூடுதல் ரயில் பெட்டிகள் தயார் செய்த பிறகு அது தினசரி செல்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். சில தொழில்நுட்ப காரணங்களால் வேளச்சேரி, பழவந்தாங்கல் ரயில் பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் வேலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரயில்வே கொடுக்கும் தொகை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். அவற்றை சீர் செய்ய மாநில அரசின் உதவியையும் ரயில்வே துறை கோரியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
-
ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்
28 Apr 202410 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
28 Apr 2024லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மணிப்பூரில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
28 Apr 2024இம்பால், மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் ஜா தெரிவித்து உள்ளார்.