எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை - 28 - மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியபோதும், தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் நலனை முன்னிட்டு பேருந்து கட்டணத்தை உயர்த்தாத தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். இளைஞரணி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் மேலான ஆணைங்கிணங்க எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை நிலையத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடைப்பெற்றது. இதில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆதிராஜாராம் தலைமை தாங்கினார். கே.ஏ.கே.முகில், என்.சதன் பிரபாகரன், செவ்வை மு.சம்பத்குமார் ஆகிய இளைஞரணி செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எஸ்.ராஜலிங்கம் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட அ.தி.மு.க. அவை தலைவர் இ.மதுசூதனன், அமைப்பு செயலாளர்கள் சி.பொன்னையன், இ.வி.கே.சுலோச்சனா சம்பத், பா.வளர்மதி எம்.எல்.ஏ., மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எஸ்.பத்மநாபன் நன்றியுரை வழங்கினார். பின்னர் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், மைனாரிட்டி தி.மு.க.வின் பணபலத்தையும், அராஜகத்தையும் தூள் தூளாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சார சுற்றுப்பயணம் செய்து, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று அயராமல் போராடி, அ.தி.மு.க.வையும், கூட்டணி கட்சியினரையும் வெற்றி பெற வைத்து, கருணாநிதியின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுகட்டி, மகத்தான சாதனை படைத்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழக முதல்வருக்கு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தனது நன்றி நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறது.
இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளி ராஜபக்ஷேவை, குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டுமென்று, ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டியும், இலங்கைத் தமிழர்கள் வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும், அதற்கு இணங்க மறுக்கும் ராஜபக்ஷே அரசு மீது, இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று மத்திய அரசினை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, அதை ஏக மனதாக நிறைவேற்றி, டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நேரில் வலியுறுத்தியதோடு, தன்னை சந்திக்க வந்த, அமெரிக்க வெளி விவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனிடம் விவாதித்ததின் மூலம் அமெரிக்க நாடாளுமன்ற வெளி விவகாரக்குழு, இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற, அடிப்படை அமைத்துக் கொடுத்த, உலகத் தமிழர்கள் போற்றும் உன்னதத் தலைவி தமிழக முதல்வர் சாதுர்யமிக்க பேராற்றல் கண்டு, உலகத் தமிழர்கள் தங்கள் வாழ்வில் நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இலங்கையில் முள்வேலி முகாம்களில் சித்திரவதை அனுபவித்து வரும் தமிழர்கள் அனாதைகள் அல்ல! அவர்களை காக்க, தாய் தமிழகத்தின் முதல்வர் இருக்கிறார் என்ற நம்பிக்கை தந்து, அரும்பெரும் சாதனை செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றி தெரிவித்து கொள்கிறது.
தமிழக முதல்வர், தலைநகர் டெல்லி சென்றபோது, ஜெயலலிதா தங்கியிருந்த, தமிழ்நாடு இல்லத்திற்கே பிரதமர் அலுவலக சிறப்பு காரினை அனுப்பி அழைத்ததோடு, வீட்டு வாயிலில் காத்திருந்து பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் வரவேற்றது எந்த முதலமைச்சருக்கும், இதுவரை அளிக்கப்படாத சிறப்பு வரவேற்பு என்று தலைநகரத்து பத்திரிகைகள் பாராட்டுகின்றன.
உலக வல்லரசுகளுக்கெல்லாம் தலைமையான அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமாவுக்கு அடுத்த நிலையில் இருக்கும், அமெரிக்க அரசின் வெளி விவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், சென்னை வந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அலுவலகத்தில் சந்தித்து, ஒரு மணி நேரம் விவாதித்து ஜெயலலிதாவின் செயலாற்றலை பாராட்டி, மகிழ்ந்து, உடனடியாக, இலங்கைமீது பொருளாதாரத்தடை விதிக்கச் செய்ததை கூர்ந்து கவனித்தால், எந்தொரு மாநில முதலமைச்சருக்கும், அரசியல் தலைவருக்கும் இந்தியாவில் இதுவரை கிடைக்காத சிறப்பு ஆகும்.
இந்தியாவை வழி நடத்துகின்ற அறிவாற்றல் மிக்க தேசத் தலைவியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உயர்ந்தோங்கி நிற்கிறார் என்று இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருவதை அளப்பரிய உவகையாக அமைந்துள்ளது.
அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த நோக்கத்தோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில், எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதா, இந்திய அரசியலை தீர்மானிக்கும் மகாசக்தியாக உருவாகி விட்டார் என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாதென்பதை எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பெருமிதத்துடன் பறைசாற்றிக் கொள்கிறது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் நலன் காக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெற்றுத் தந்த, திராவிட இயக்க சரித்திர சாதனையான 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்ட பாதுகாப்பை தொடர்ந்து நிலை நிறுத்தும் வகையில், ராஜ தந்திரத்தோடு சரியான நேரத்தில் உரிய ஆணையை இயற்றி, இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் வழி காட்டியாக, காவல் அரணாக, திகழும் சமூக நீnullதி காத்த வீராங்கனை, திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றி தெரிவித்து கொள்கிறது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு, மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மோசடியாக நில ஆக்கிரமிப்பு செய்தவர்கள்மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை பறிகொடுத்தவர்களுக்கு அவர்களின் நிலம் கிடைக்கவும், காவல்துறையில் நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு ஏற்படுத்தியும், சிறப்பு nullநீதிமன்றம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுத்தும், சாதனை படைத்துவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றி தெரிவித்து கொள்கிறது.
அவசரத்தில் அள்ளித் தெளித்த மாக்கோலம் போல, கருணாநிதி தலைமைச் செயலகம் கட்டுவதாகக் கூறி, தான்தோன்றித்தனமாக மனம் போன போக்கில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்த பழமை வாய்ந்த கட்டிடங்களை இடித்து தள்ளிவிட்டு, அரைகுறை கட்டிடம் கட்டி, சினிமா செட்டிங் போட்டு, பிரதமரை ஏமாற்றி புதுமனை புகுவிழா நடத்தி, தலைமை செயலகம் மாற்றி விட்டேன் என்று அறிவித்து, அரசு பணத்தினை ஊதாரித்தனமாக 1000 கோடிகளுக்கு மேல் செலவழித்ததில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை, ஊழல்களை விசாரணை செய்ய nullநீதிபதி தங்கராஜ் தலைமையில், விசாரணைக் கமிஷன் அமைத்திட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய அரசு, பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலைகளை தாறுமாறாக உயர்த்தி மக்கள்மீது கடும் விலையேற்றத்தை திணித்து, பாதிப்புக்குள்ளாக்கி உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு மீது, இதுவரை விதிக்கப்பட்டு வந்த மதிப்பு கூட்டுவரி (வாட்) முழுவதும் nullநீக்கம் செய்து, இனி தமிழ்நாட்டில் சமையல் எரிவாயுமீது வாட் வரி இல்லை என்று அறிவித்து, ஏழைஎளிய மக்கள் குறிப்பாக, தாய்மார்கள் நெஞ்சில் பால் வார்த்துள்ளார்கள். அதுபோலவே, டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திய பின்னரும், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயராமல் பாதுகாத்துள்ளார். கருணாநிதி கட்சி அங்கம் வகிக்கும் மத்திய அரசின், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தமிழக மக்களை காத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றி தெரிவித்து கொள்கிறது.
மத்திய அரசிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் பங்கேற்று பதவி சுகம் அனுபவித்துக் கொண்டு, விலைவாசி உயர்வுகளுக்கு கூட்டுப் பொறுப்பேற்க வேண்டிய கருணாநிதி தன் கட்சி பொதுக் குழுவில் மத்திய அரசு அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதாக கபட தீர்மானம் இயற்றி, தன் பொறுப்பை தட்டிக்கழிக்கும் இழி செயலை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி கடுமையாக கண்டிக்கின்றது.
ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற்றி சாதனை படைத்து வருவதையும், கழக அரசின் பட்ஜெட் மூலம் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதையும், அ.தி.மு.க. செயற்குழு தீர்மானங்களையும் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
எதிர்வரும் தமிழக உள்ளாட்சி தேர்தல்களில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், தமிழக முதல்வர் அறிவிக்கின்ற வேட்பாளர்கள் அனைவரையும், வெற்றிப் பெறச் செய்து, வெற்றிக் கனியை ஜெயலலிதாவுக்கு மலர் பாதங்களில் சமர்ப்பிக்க, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சபதமேற்று உழைக்க உறுதியேற்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து
30 Apr 2024சென்னை : உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலையை பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.