எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, செப். - 15 - பரமக்குடி சம்பவம் குறித்து நீதி விசாரணை அறிக்கை வந்தபிறகு தான் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழக சட்டசபை நடவடிக்கை நேற்று காலை 10 மணிக்கு துவங்கியதும், சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் வாசித்தார். திருக்குறள் வாசிப்பு நிகழ்ச்சி முடிந்ததும், தி.மு.க.வினர் சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து 5வது நாளாக இவர்கள் இப்படி வெளிநடப்பு செய்கின்றனர். அதன்பிறகு அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என்றும் சபாநாயகர் ஜெயக்குமார் தீர்மானம் வாசித்தார். இரங்கல் தீர்மானம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், பா.ம.க. ஆகிய கட்சிகள் சார்பில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பேச அனுமதி கேட்டனர். சபாநாயகர் ஜெயக்குமார் இதற்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து 4 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க., புதிய தமிழகம் கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபின்னர், செ.கு. தமிழரசன் (குடியரசு கட்சி) பேசினார். அவர் பேசும்போது, பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து அங்கு அமைதி ஏற்படுவதற்கான அனைத்து நடவடிக்கையையும் முதல்வர் எடுத்து வருகிறார். இது குறித்து சபையில் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் என்றார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக டி.ஆர்.ஓ. விசாரணை நடத்த நான் உத்தரவிட்டு இருந்தேன். டி.ஆர்.ஓ. விசாரணை நடத்தியிருந்தால் இதற்குள் அறிக்கை வந்திருக்கும். அதன் அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் தான் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு nullநீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்ட பிறகு அவர்கள் அறிக்கை வந்த பிறகுதான் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அவர்கள் அளிக்கும் பரிந்துரைபடிதான் உதவித் தொகையும் அதிகரித்து கொடுக்கமுடியும். nullநீதி விசாரணை அறிவித்திருப்பதால் அதன் அறிக்கை வரும் வரை வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அறிக்கை வந்த பிறகு யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முன்னதாக சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்ததற்க்கான காரணம் குறித்து சட்டசபைக்கு வெளியே சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கூறியதாவது: பரமக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணமான போலீசார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும். தலித் மக்கள் ஆயிரம் பேரை வீடு வீடாக சென்று கைது செய்து அவர்கள் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவருவதற்காக சபையில் பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். எனவே நாங்கள் வெளி நடப்பு செய்துவிட்டோம்.
ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு) கூறியதாவது: பரமக்குடியில் 7 தலித்துகள் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்கள். துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை தற்காலிக பணி நீnullக்கம் செய்ய வேண்டும். மிருகம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கு மனித உயிர்கள் அநியாயமாக பழி வாங்கப்பட்டு உள்ளது. எனவே நஷ்டஈடு அதிகமாக கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். சமாதான கமிட்டி அமைக்க வேண்டும். தென் மாவட்டங்களில் கலவரம் ஏற்படும் சூழ்நிலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கருத்துக்களை பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி கூறியதாவது: துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 17 பேரையும் மதுரையில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது. அப்பாவி மக்கள் 1000 பேர் மீது வழக்கு போட்டு கைது செய்து இருக்கிறார்கள். 7 உயிர்கள் பறிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சமாவது கொடுக்க வேண்டும். அமர்வு nullநீதிமன்ற nullநீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி., எஸ்.பி. ஆகியோரை தற்காலிக பணி நீnullக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசனும் இதே காரணத் துக்காக வெளிநடப்பு செய்ததாக நிருபர்களிடம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
மறைந்த குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
09 Apr 2025சென்னை : மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலைியல் அவரது உடல் முழு அரச
-
மகாவீர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு: தமிழக சட்டசபைக்கு 5 நாட்கள் விடுமுறை
09 Apr 2025சென்னை : தமிழக சட்டசபைக்கு 5 நாள் விடுமுறை அடுத்து 15-ம் தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.
-
இன்று மகாவீரர் ஜெயந்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
09 Apr 2025சென்னை : மகாவீரர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, “சமண சமய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறே
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-04-2025.
09 Apr 2025 -
ரூ.1,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் : தமிழக அரசு அறிவிப்பு
09 Apr 2025சென்னை : 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர்: மறைந்த குமரி அனந்தனுக்கு தே.மு.தி.க. சார்பில் புகழஞ்சலி
09 Apr 2025சென்னை : தமிழக அரசியலிலும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்று கொண்டவர்.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 23 பேர் உயிரிழப்பு
09 Apr 2025காஸா : காஸா நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்
-
சட்டசபையில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை கொண்டு வர வேண்டும் : திருமாவளவன் பேட்டி
09 Apr 2025சென்னை : சட்டசபையில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
கோவை வந்தார் ராஜ்நாத் சிங்
09 Apr 2025கோவை : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
-
குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் - இ.பி.எஸ். அஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் மறைவையடுத்து அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்தினார்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார்
09 Apr 2025சென்னை : மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகத்திற்கு வர உள்ளார்.
-
மறைந்த குமரி அனந்தனுக்கு தமிழக தலைவர்கள் புகழஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
-
ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலை: போலீசார் எச்சரிக்கை
09 Apr 2025சென்னை : ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலை பயன்படுத்துபவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
09 Apr 2025மும்பை : வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் : ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை
09 Apr 2025புதுடெல்லி : சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் என்று ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
09 Apr 2025சென்னை : கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர
-
5 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
09 Apr 2025சென்னை : தொடர்ந்து குறைந்து நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவந்த தங்கம் விலை 5 நாட்களுக்குப் பின்னர் நேற்று (ஏப்.9) மீண்டும் உயர்ந
-
தமிழ் மொழியை பிரபலப்படுத்த முயற்சி செய்தவர் குமரி அனந்தன் : பிரதமர் மோடி புகழஞ்சலி
09 Apr 2025புதுடெல்லி : தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சரத்தை பிரபலப்படுத்தவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் தமிழக முன்னேற்றத்துக்கு உழைத்தமைக்காகவும், இந்த சமூகத்
-
பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம் : இந்தோனேசி அதிபர் அறிவிப்பு
09 Apr 2025காஸா : காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு இந்தோனேசியா அரசு தற்காலிக அடைக்கலம் அளிக்கும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
-
காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் வழிப்பாதை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
09 Apr 2025டெல்லி : காட்பாடி - திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரெயில் வழிப்பாதையை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
சிங்கப்பூர்: தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மகனை நேரில் சந்தித்த பவன் கல்யாண்
09 Apr 2025சிங்கப்பூர் சிட்டி : சிங்கப்பூரில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மகனை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சந்தித்தார்.
-
நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
09 Apr 2025சென்னை : நடிகர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தவுடன் ராணாவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
09 Apr 2025புதுடெல்லி : இந்தியா வந்தவுடன் ராணாவை என்.ஐ.ஏ.அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
மாரியம்மன் கோவில் தேரோட்டம்: திருச்சிக்கு ஏப.15-ல் உள்ளூர் விடுமுறை
09 Apr 2025திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய ஆதார் செயலி விரைவில் அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
09 Apr 2025புதுடெல்லி : இனி ஆதார் அட்டையை கையில் வைத்துக்கொண்டு அலைய வேண்டியதில்லை என்றும், முகத்தை வைத்து ஆதார் எண்ணை அடையாளம் காட்டும் புதிய ஆதார் செயலி அறிமுகப்படுத்தப்படுவதாகவ