எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, செப்.- 28 - சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி - 20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டிரினிடாட் டொபாக்கோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி -20 கிரிக்கெட் போட்டியில் உலகின் 10 முன்னணி அணிகள் கோப்பையை வெல்ல களமிறங்கியுள்ளன. இதில் தனது முதல் லீக் போட்டியில் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி, மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்த டிரினிடாட் டொபாக்கோ அணியை சந்தித்தது. டாஸ் வென்ற டிரினிடாட் கேப்டன் டேரன் கங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்கள் சிம்மன்ஸ் மற்றும் அட்ரியன் பரத் ஆகியோர் அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 21 க்கு உயர்ந்தபோது 11 ரன்கள் எடுத்திருந்த பரத், வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் பந்தில் போல்டானார். இதையடுத்து ப்ராவோ களமிறங்கினார். இவரும் அதிரடியை காட்டினார். அணியின் எண்ணிக்கை 41 க்கு உயர்ந்தநிலையில், 21 ரன்கள் எடுத்திருந்த சிம்மன்ஸ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். அடுத்து இறங்கிய கேப்டன் கங்கா 5 ரன்கள் மட்டுமே எடுத்து ப்ரான்க்ளின் பந்தில் சதீஷால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அதே ஸ்கோரிலேயே விக்கெட் கீப்பர் ராம்தின் ரன் எதுவும் எடுக்காமல் ஹர்பஜன் பந்தில் அவராலேயே பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனால் 57 ரன்களை எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்தது டிரினிடாட் அணி. இதனை அடுத்து டிரினிடாட் அணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஹர்பஜன் மற்றும் மலிங்கா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசினர். இதனால் டிரினிடாட் அணி 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்களை மட்டுமே எடுத்தது. டிரினிடாட் தரப்பில் அஹமது எடுத்த 23 ரன்களே அதிகபட்சமாகும். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளையும், மலிங்கா 2 விக்கெட்டுகளையும், அஹமது, பொல்லார்ட்டு, பிராங்ளின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
20 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ். ஆனால் டிரினிடாட் அணியின் ராம்பாலின் அதிரடியான பந்துவீச்சில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சுமன்-10, பிராங்க்ளின் -0 , சைமண்ட்ஸ் -0 என்று ஆகியோர் அவுட்டானார்கள். துவக்க வீரர் பிளிஜார்டின் விக்கெட்டை பத்ரி எடுக்க, 16 ரன்களை எடுப்பதற்குள் மும்பை அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ராயுடுவுடன் ஜோடிசேர்ந்த அதிரடி வீரர் பொல்லார்டும் 9 ரன்களை மட்டும் எடுத்து நரைன் பந்தில் போல்டானார். இதனால் மும்பை அணியின் வெற்றி கேள்விக்குறியானது. மிக எளிய இலக்கை கடின இலக்காக்கி மும்பை அணி தத்தளித்தது. டிரினிடாட் டொபாக்கோ அணியின் பந்துவீச்சும் பீல்டிங்கும் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் மீண்டும் ஒரு முறை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கைகொடுக்க மும்பை அணி வெற்றி இலக்கை மிக மெதுவாக நெருங்கியது. அணியின் எண்ணிக்கை 96 ஐ எட்டியபோது 8 வது விக்கெட்டாக மலிங்கா எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதனால் மும்பை அணிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. 47 பந்துகளில் 36 ரன்களை எடுத்திருந்த ராயுடு மும்பை அணி 97 ரன்களில் இருந்தபோது ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் கடைசி பந்தில் 2 ரன்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் களமிறங்கிய சாஹால் அந்த பந்தை தட்டிவிட்டு மிக வேகமாக ஓடி ஒரு ரன்னை எடுத்தார். அதற்குள் பந்து பீல்டரை எட்டிவிட சாஹால் மிக வேகமாக இரண்டாவது ரன்னிற்கு ஓடினார். அதற்குள் பந்து கீப்பர் ராம்தின் கைக்கு கிடைத்தது. ஆனால் கீப்பர் பந்தை ஸ்டெம்பை குறிவைத்து அடிக்காததால் சாஹால் அந்த ரன்னையும் பூர்த்தி செய்தார். இதனால் கடைசி பந்தில் மும்பை இண்டியன் த்ரில் வெற்றியை பெற்றது. ஆட்ட நாயகனாக ரவி ராம்பால் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஹர்பஜன்சிங் இந்த போட்டியில் வெற்றிபெற அனைத்து தகுதிகளும் நிறைந்த அணி டிரினிடாட் டொபாக்கோதான் என்றார். தங்களது அணி வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடியதாக தெரிவித்த அவர், பேட்டிங் இவ்வளவு மோசமாக இருந்தால் அரையிறுதியை எட்டுவது கடினம் என்றும் தெரிவித்தர்.
போட்டி முடிவு குறித்து கருத்து தெரிவித்த டிரினிடாட் டொபாக்கோ அணி கேப்டன் டேரன் கங்கா, தங்களது அணி பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் எதிரணிக்கு சிரமத்தை ஏற்படுத்தியது என்றும் கடைசியில் கீப்பர் ராம்தின் முடிவை மாற்றிவிட்டார் என்றும் ஆனால் ஆட்டத்தில் இதுவெல்லாம் சகஜம் என்றும் தெரிவித்தார்.
மும்பை அணி இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளை எடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை12 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
08 May 2024சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை கோர்ட் காவல் நீட்டிப்பு
08 May 2024பெங்களூரு : பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ம.ஜ.த.
-
சர்ச்சை பேச்சு எதிரொலி: காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா திடீர் ராஜினாமா
08 May 2024புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
08 May 2024சென்னை : பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்த 'இன்டியா' கூட்டணி கட்சிகள்: அமித் ஷா
08 May 2024ஹர்தோய், வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தனர் 'இன்டியா' கூட்டணி கட்சிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உ.பி.யில் பிரசாரத்தின் ப
-
கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து தனது மருமகனை நீக்கினார் மாயாவதி
08 May 2024லக்னோ, ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், "அவர் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை" கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொற
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
08 May 2024டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சு...
-
உயிரிழந்தது ஜெயக்குமார்தானா? - டி.என்.ஏ. பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பிவைப்பு
08 May 2024நெல்லை : ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
மோடியின் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் கண்டுள்ளன : நிர்மலா சீதாராமன் தகவல்
08 May 2024புதுடெல்லி : தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி வருகின
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார