முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு: ஒருவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

மாவ், டிச.- 12 - உத்தரபிரதேச மாநிலத்தில் கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார்  கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ரகுநாத்புரா என்ற பகுதியில் ஒரு கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலை இயங்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த தொழிற்சாலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 25 கைத்துப்பாக்கிகளையும், துப்பாக்கி தயாரிப்பதற்கான இதர உபகரணங்களையும் போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக தன்வீர் அகமது என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் ரயிலில் தப்பிச்செல்ல முயன்றபோது போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். ஆயுத தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்