எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, செப்.17 - 9 மாநில இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கை ஓங்கியுள்ளது; ராஜஸ்தானிலும் ஆளும் பாஜகவுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது.
மூன்று மக்களவை மற்றும் உ.பி.யின் 11, ராஜஸ்தானின் 4, குஜராத்தின் 9, மேற்கு வங்காளத்தின் 2, அசாமின் 3 மற்றும் சிக்கிம், திரிபுரா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் 33 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. அத்தனை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. குஜராத் வதோதரா மக்களவை தொகுதி, மணிநகர் சட்டப்பேரவை தொகுதி, மேற்குவங்கத்தின் பசிராத் தக்ஷின் சட்டப்பேரவை தொகுதிகள் என அங்கொன்றும் இங்கொன்றுமாக பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் பரவலாக தோல்வியை தழுவியுள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. வெயர், நசீராபாத், சுராஜ்கர், கோட்டா ஆகிய 4 தொகுதிகளில் மூன்று தொகுதிகளை காங்கிரசிடம் பாஜக இழந்துள்ளது. கோட்டா தொகுதியை மட்டும் அக்கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் அம்மாநில பாஜக தலைவர் அசோக் பர்னமி கூறும்போது: "மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம். கட்சித் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்து செயல்படுவோம்" என்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்திலேயே முதல்வர் வசுந்தரா ராஜேவை சந்தித்த மாநில பாஜக தலைவர் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் பசிராத் தக்ஷின், சவுரிங்கீ ஆகிய 2 சட்டபேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளில், பாஜக வேட்பாளர் ஷமிக் பட்டாச்சார்யா பசிராத் தக்ஷின் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். சவுரிங்கீ தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் ஹூசைன் கூறியதாவது: சில இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. முடிவுகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. மக்கள் உள்ளூர் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு வாக்களித்துள்ளனர். அதே வேளையில் மேற்குவங்கத்தில் தாமரை மலர்ந்துள்ளது மிகவும் நல்ல செய்தி. இடைத்தேர்தல் முடிவுகளை தேசிய மற்றும் மாநில அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகக் கூடாது என்றார்.
குஜராத் மாநிலத்தில் 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒரு மக்களவை தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 6 சட்டப்பேரவை தொகுதிகள், ஒரு மக்களவை தொகுதி என மொத்தம் 7 இடங்களிலும் காங்கிரஸ் 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக குஜராத்தின் 26 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல் குஜராத் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீசா, மங்ரோல், கம்பாலியா ஆகிய மூன்று தொகுதிகளை காங்கிரசிடம் பாஜக இழந்துள்ளது.
இருப்பினும், குஜராத் மாநிலம் வதோதரா மக்களவை தொகுதியில் பாஜக 3 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திகல் வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி வெற்றி பெற்ற வாரணாசி, வதோதரா தொகுதிகளில் வதோதரா தொகுதியிலிருந்து அவர் ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக வேட்பாளர் ரஞ்சன்பென் பட் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர ராவத்தைவிட 3,29,507 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவந்திகா சிங் அறிவித்தார்.
தெலங்கானாவின் மேடக் மக்களவை தொகுதியில், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் வேட்பாளர் கே.பிரபாகர் ரெட்டி 3,61,277 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தெலங்கானா முதல்வரானதால் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தெலங்கானாவின் மேடக் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை தொகுதிக்கும் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் 7 இடங்களில் வெற்றி, 4 இடங்களில் முன்னிலை என சமாஜ்வாதி கட்சியின் கை ஓங்கியுள்ளது. தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ்: "மக்களவை தேர்தலில் மதவாத சக்திகளால் மக்கள் கவரப்பட்டனர். ஆனால் இப்போது அவர்கள் உண்மை நிலை உணர்ந்துள்ளனர். மதவாத சக்திகளை தோற்கடித்துள்ளனர்" என்றார்.
அசாமின் லக்கிபூர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்தீப் கோலா, பாஜக வேட்பாளரை 9172 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ராஜ்தீப் கோலா பெற்ற மொத்த வாக்குகள் 40,090 ஆகும். மொத்தம் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
சிக்கிம் மாநிலத்தில் சுயேட்சை வேட்பாளர் ரூப் நாராயணன் சாம்லிங் வெற்றி பெற்றார். இம்மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. களத்தில் பாஜக, காங்கிரஸ், சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளும் இருந்தன. இம்மூன்று கட்சி வேட்பாளர்களையும் வீழ்த்தி சுயேட்சை வேட்பாளர் ரூப் நாராயணன் சாம்லிங் வெற்றி பெற்றுள்ளார்.
திரிபுராவில் நடந்த ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரவத் சவுத்ரி வெற்றி பெற்றார். விவசாயத் துறை முன்னாள் ஊழியரான இவர் 21,759 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 9 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமையாத நிலையில், பிரித்தாளும் அரசியலை மக்கள் புறக்கணித்துள்ளதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
-
ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்
28 Apr 202410 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
28 Apr 2024லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மணிப்பூரில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
28 Apr 2024இம்பால், மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் ஜா தெரிவித்து உள்ளார்.