எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிஸ்பேன், மார்ச் - 5 - ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் போட்டியின் முதல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான காமன்வெல்த் பேங்க் சீரிஸ் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி கடைசி இடம் பிடித்ததால் போட்டியில் தோற்று வெளியேறியது. இதையடுத்து இந்த தொடரில் இலங்கை ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகளைக் கொண்ட பைனல் நடைபெறுகிறது. இதில் முதலாவது பைனல் நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால் போட்டி ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. பிரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் விக்கெட் கீப்பர் வாடே ஆகியோர் களமிறங்கினர். துவக்கத்தில் இருந்தே அதிரடியாக இந்த ஜோடி விளையாடி ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. இந்த ஜோடி முதல் 50 ரன்களை 40 பந்துகளில் எடுத்தது. அடுத்து 100 ரன்களை 106 பந்துகளில் எடுத்தது. 24 ஓவர்களில் ஆஸி. அணி 136 ரன்களை எடுத்திருந்தபோது 64 ரன்களை எடுத்திருந்த வாடே, குலசேகராவின் பந்தில் ஹெராத்தால் அற்புதமாக கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். இவரை அடுத்து ஆல்ரவுண்டர் வாட்சன் களமிறங்கினார். துவக்கத்தில் சற்று நிதானமான ஆட்டத்தை மேற்கொண்ட வார்னர், இதன் பிறகு அதிரடியை காட்ட ஆரம்பித்தார். வாட்சன் அதிரடியாக 25 பந்துகளில் 21 ரன்களை எடுத்து மகரூப்பின் பந்தில் திரிமன்னேவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய கிறிஸ்டியன் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 10 ரன்கள் எடுத்திருந்த கிறிஸ்டியன், பிரசாந்த்தின் பந்தில் சங்ககாராவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய டேவிட் ஹஸ்ஸியும் 1 ரன்களை மட்டும் எடுத்து ஹெராத்தின் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து அவுட்டானார். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வார்னர் அதிரடியாக சதமடித்தார். இவர் 111 ரன்களில் 100 ரன்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் வார்னருடன் சேர்ந்து அதிரடி காட்ட ஆஸியின் ரன் எண்ணிக்கை மளமளவென கூடியது. 25 பந்துகளில் 37 ரன்களை எடுத்த கிளார்க், மலிங்காவின் பந்தில் ஜெயவர்த்தனேவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது ஆஸி. அணி 46.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய மைக்கேல் ஹஸ்ஸி வார்னருடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களை எடுத்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்த வார்னர் 163 ரன்களை எடுத்தார். ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்களில் இவரது 163 ரன் 3 இடத்தை பெற்றது. ஹஸ்ஸி ஆட்டமிழக்காமல் 10 பந்துகளில் 19 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் பிரசாத் 2 விக்கெட்டுகளையும், ஹெராத், குலசேகரா, மலிங்கா, மகரூப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு இலங்கை அணிக்கை நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை துவக்க வீரர்கள் தில்ஷன் மற்றும் ஜெயவர்த்தனா ஆகியோர் களமிறங்கினர். 4.4 ஓவர்களில் 39 ரன்கள் எடுத்திருந்தபோது 14 ரன்களை எடுத்திருந்த ஜெயவர்த்தனா பிரட்லீயின் பந்தில் வாடேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து சங்ககாரா களமிறங்கினார். 7வது ஓவரில் தில்ஷனும் 27 ரன்கள் எடுத்த நிலையில் பிரட்லீயால் போல்டு செய்யப்பட்டார். அடுத்து வந்த சண்டிமால் 14 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் ஹஸ்ஸியின் பந்தில் பட்டின்சனால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இலங்கை அணி 16.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து வந்த திரிமன்னேவும் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஹஸ்ஸியின் பந்தில் வாடேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து தரங்கா, சங்ககாராவுடன் ஜோடி சேர்ந்தார். நல்ல முறையில் ஆடிக்கொண்டிருந்த சங்ககாரா 42 ரன்கள் எடுத்த நிலையில் பிரட்லீ பந்தில் வாட்சனால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மகரூப்பும் 8 ரன்களே எடுத்து அவுட்டானார். அப்போது இலங்கை அணி 30.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் தரங்காவுடன் ஜோடி சேர்ந்த குலசேகரா அதிரடி காட்டினார். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 43 பந்துகளில் 73 ரன்களை அடித்த குலசேகரா, டேவிட் ஹஸ்ஸியின் பந்தில் தோஹர்த்தியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இலங்கை அணி 41.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து நம்பிக்கையுடன் விளையாடி வந்த தரங்காவும் 60 ரன்களை எடுத்திருந்தபோது வாட்சன் பந்தில் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதையடுத்து பிரசாத் அதிரடியாக சில ஷாட்டுகளை விளையாடி இலங்கை அணி 300 ரன்களை கடக்க உதவினார். ஆனால் கடைசி கட்டத்தில் ஆஸி. வீரர்களின் பந்துவீச்சு நல்ல முறையில் இருந்ததால் டெயில் எண்டர்களால் எட்டக்கூடிய இலக்கையும் எட்ட முடியவில்லை. இறுதியில் இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 306 ரன்களை எடுத்தது. பிரசாத் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. தரப்பில் ஹஸ்ஸி 4 விக்கெட்டுகளையும், வாட்சன், பிரட்லி தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 163 ரன்களை குவித்த வார்னர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் ஆஸி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகளை கொண்ட இறுதிப் போட்டியில் 1 - 0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது இறுதி போட்டி நாளை (6.3.2012 )நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.