முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்நாத்சிங்குடன் இந்திய தூதர் சந்திப்பு பாக்.கின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த புதிய ஆவணங்களை சேகரிக்கும் உள்துறை

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த இந்தியா ஆவணங்களை சேகரித்து வருகிறது.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால், இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் உறவு தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா, நேற்று காலை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். உலக அரங்கில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த உள்துறை அமைச்சகம் புதிய ஆவணங்களை சேகரித்து வருகிறது. பாகிஸ்தானின் பொய்களை அம்பலப்படுத்த உலகில் உள்ள இந்திய தூதர்களிடம் இவை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து