எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - மதுரை - கன்னியாகுமரி இடையேயான இரட்டை அகல ரயில் பாதை திட்டப் பணிகளை உடனே துவக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், செயலாளர் செல்வம், முதுநிலை தலைவர் இரத்தினவேல் மற்றும் மதுரை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராம் பாபு ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் டெல்லியில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து சங்கத்தின் சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.
அதில், மதுரை-கன்னியாகுமரி இரட்டை அகல ரயில்பாதைத் திட்டப் பணிகள் உடனடியாக துவக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் மதுரை -கன்னியாகுமரி இடையே திட்டப் பணிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. வெறும் அறிவிப்போடு திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இத்திட்டம் முழுமையாக விரைவில் நிறைவேற்றப்பட்டால்தான் தென் தமிழக மக்களுக்கு திட்டத்தின் பயன்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறும். எனவே மதுரை-கன்னியாகுமரி பிரிவில் திட்டப் பணிகள் மேலும் காலதாமதமின்றி துவங்கப்படவும் விரைவில் நிறைவேறவும் 2019-2020 ரயில்வே பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
2009-2010-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் மதுரை-போடிநாயக்கனூர் இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் ரூ. 150 கோடி மதிப்பீட்டுடன் அறிவிக்கப்பட்டு மீட்டர் கேஜ் பாதை மூடப்பட்டது. மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக 20 சதவீத திட்டப் பணிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ. 240 கோடி அளவிற்கு வேளாண் உற்பத்திப் பொருட்களும் பிற சரக்குகளும் இப்பகுதிகளில் இருந்தும் பிற பகுதிகளுக்கும் சாலைப் போக்குவரத்து மூலம் அனுப்பப்படுகின்றன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்போக்குவரத்தில் பெரும் பகுதி ரயில் மூலம் நடைபெறும். திண்டுக்கல்-கோட்டயம் இடையே தேனி, போடிநாயக்கனூர், கம்பம், குமுளி வழியாக அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டும். திண்டுக்கல்-கோட்டயம் இடையே தேனி-போடிநாயக்கனூர்-கம்பம்-குமுளி வழியாக ரூ. 473.89 கோடி மதிப்பீட்டில் 123 கி.மீ நீளம் உள்ள அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படுவதின் மூலம் நாட்டின் இரு முக்கிய துறைமுக நகரங்களான தூத்துக்குடிக்கும் மற்றும் கொச்சிக்கும் இடையே நேரடியான ரயில் தொடர்பு ஏற்படும். தமிழகத்திற்கும் குறிப்பாக தென் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையே சரக்குப் போக்குவரத்து அதிகரித்து தொழில் வணிகம் பெருகும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரிதும் பயன்பெறுவர்.
எனவே 2019-2020-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் அவை நிறைவேறிடச் செய்திட வேண்டும். மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி புதிய அகல இரயில்பாதைத் திட்டப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். 2011-2012-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு அருப்புக்கோட்டை வழியாக புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இப்புதிய ரயில்பாதை அமைக்கப்படுவது சென்னை-மதுரை-தூத்துக்குடி வழித்தடத்தில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், தூத்துக்குடி துறைமுகத்திற்கு நிறைய சரக்கு ரயில்கள் செல்வதற்கும், தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டில் மிகவும் பின் தங்கி உள்ள அருப்புக்கோட்டை பகுதிகளில் தொழில் பொருளாதார வளர்ச்சி உத்வேகம் பெறவும் பெரிதும் உதவும். திட்டத்திற்கான ஆய்வு அறிக்கையை தென்னக ரயில்வே சமர்ப்பித்து விட்டது. எனவே 2019-2020-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகள் விரைவாக துவங்கி நிறைவு பெறச் செய்திட வேண்டும்.
மதுரைக்கும், பெங்களூருவிற்கும் இடையே பகல் நேர விரைவு இரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தற்போது தூத்துக்குடிக்கும், மைசூருக்கும் இடையே மதுரை மற்றும் பெங்களூரு வழியாக ஓடிக் கொண்டிருக்கும் விரைவு ரயில் மற்றும் நாகர்கோவில் - மதுரை - பெங்களூரு ரயிலில் பயணிகள் போக்குவரத்து மிக அதிகமாக உள்ளது. எனவே மதுரைக்கும் பெங்களூருக்கும் இடையே பகல் நேர விரைவு ரயில் ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மதுரையிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். தற்போது நேரடியாக மதுரையிலிருந்து சென்னைக்கு காலையில் வைகை விரைவு ரயில், இரவில் பாண்டியன் விரைவு இரயில் ஆகிய இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் மதுரைப் பயணிகளுக்கு இடம் கிடைப்பதும் முன் பதிவு பெறுவதும் மிகவும் சிரமமாக இருக்கிறது. தென் மாவட்டஙகளில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் பிற ரயில்களில் குறைந்த அளவே மதுரைக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. எனவே சென்னை-மதுரை இடையே இரட்டை அகல ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றியவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
கொல்லம் - மதுரை விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். மானாமதுரை - பரமக்குடி, ராமேஸ்வரம், ராமேஸ்வரம் பகுதிகளில் உள்ள பயணிகள் நலன் கருதி கொல்லம் - மதுரை விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தென் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பயணிகள் நலன் கருதி ஜோத்பூர் - அகமதாபாத்-சென்னை, பீகானீர்-கோயம்புத்தூர், திருச்சி-மங்களூர் ஆகிய விரைவு ரயில்களை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.