முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 20-ம் தேதி அழகர்கோவில் சித்திரை திருவிழா

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.13 - அழகர்கோவில் சித்திரை திருவிழா வருகிற 20ம் தேதி மூர்த்தக்காலுடன்  துவங்குகிறது. அடுத்த மாதம் 6ம் தேதி அழகர் தங்ககுதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.   அழகர்கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்காடசலபதி கோவிலில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி வருகிற 20ம் தேதி நடைபெறுகிறது.  பின்னர் திருவிழாவை முன்னிட்டு 2 ம் தேதி அழகர்மலை கள்ளழகர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் முதல் நாள் நிகழ்ச்சி துவங்குகிறது. 4ம் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு அழகர் மலையில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார். பின்னர் அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல், வழியாக மதுரை வருகிறார். 5ம் தேதி காலை மூன்றுமாவடியில் சுவாமிக்கு பக்தர்கள் வரவேற்பு அளிக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோ.புதூர், சர்வேயர் காலனியாக வந்து பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளுகிறார். பின்னர் பிரசன்னவெங்கடாஜலபதி கோவிலுக்கு வருகிறார். அங்கு திருமஞ்சணமாகி தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

   அதன்பிறகு அங்கு விடியவிடிய அழகருக்கு பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. இதன்பின் 6 ம் தேதி காலை தங்க குதிரை வாகனத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷத்தின் நடுவில் வைகை ஆற்றில் அழகர் இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி ராமராயர் மண்டபம் வருகிறார். அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள்கோவிலில் எழுந்தருளுகிறார். அங்கிருந்து மறுநாள் காலை வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். மதியத்திற்கு மேல்அங்கிருந்து புறப்பட்டு பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி இரவு ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார். அங்கு விடியவிடிய அழகரின்தசாவதார காட்சி நடைபெறுகிறது. 9ம் தேதி அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளி மலையை நோக்கி புறப்படுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்