எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.22 - தென் மண்டல செயலாளராக இருக்கும் எனக்கு தெரியாமல் மு.க.ஸ்டாலின் எப்படி இளைஞரணி கூட்டத்தை நடத்தினார் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆவேசமாக கேட்டுள்ளார். திமுக மாநில பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு நேர்காணல் நடத்தி தேர்வு செய்து வருகிறார். இதில் சேலம் மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்பு தெரிவித்தார். எங்கள் மாவட்ட நிர்வாகிகள் தேர்வை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று தலைமைக்கு கடிதமும் எழுதினார். இதன் பிறகு அவரை சமாதானம் செய்து அங்கு மு.க.ஸ்டாலின் இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்தார். தென் மாவட்டங்களில் தேர்வு செய்யுமபோது இங்கு மு.க.அழகிரிக்கு அதிகமான ஆதரவாளர்களால் பிரச்சனை ஏற்படும் என்று கருதிய மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே தலைமை கழக அறிவிப்பை வெளியிட்டு, அதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
முழுமையாக மு.க.அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகரில் இளைஞரணி நிர்வாகிகள் நேர்காணலுக்கு மு.க.ஸ்டாலின் காத்துக்கொண்டிருந்தார். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெளிநாடு சென்றிருந்த வேளையில் திடீரென மதுரையில் நேர்காணல் நடைபெற்றது. கடந்த 13 மற்றும் 14 ம்தேதி நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது. 14ம் தேதி திமுக பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள் பி.மூர்த்தி, கோ.தளபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் முக்கியமான நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மு.க.ஸ்டாலின் சென்னை சென்றதும் தலைமை கழகத்தில் முறையிட்டதின் பேரில் மதுரை திமுக நிர்வாகிகள் இசக்கிமுத்து, சிவக்குமார், உதயகுமார், சின்னம்மாள், ரவீந்திரன், ஒச்சுபாலு, கோபிநாதன், பாண்டியராஜன், முபாரக்மந்திரி, முருகன், ராமலிங்கம், வி.கே.குருசாமி, தர்மலிங்கம், ஜெயராஜ், பி.எம்.மன்னன் ஆகிய 17 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. வெளிநாடு சென்று திரும்பிய மு.க.அழகிரியிடம் பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகிகள் முறையிட்டனர். உங்களுடைய பெயரை புறக்கணித்ததால்தான் நாங்கள் நிகழ்ச்சியை புறக்கணித்தோம் என்றும் தெரிவித்தனர். மேலும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட மதுரை மாநகர நிர்வாகிகள் 17 பேரும் விளக்கம் அளித்து தலைமை கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் விட்டனர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து மதுரை திரும்பிய மு.க. அழகிரி ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, திமுகவில் நான் தென்மண்டல செயலாளராக இருக்கிறேன். எனவே தென் மண்டல பகுதியில் என்ன நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தாலும் எனக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நடப்பது பற்றியோ, மதுரையில் பொதுக்கூட்டம் நடப்பது பற்றியோ என்னிடம் மு.க.ஸ்டாலின் முன்பே தெரிவிக்கவில்லை. இது போன்று பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் என்னிடம் ஆலோசிப்பதில்லை. தென் மண்டல செயலாளர் என்ற முறையில் என்னிடம் ஆலோசித்திருக்க வேண்டும். கட்சி தலைவர் ஜனநாயக முறையில் நடந்து கொள்கிறார். ஆனால் மற்ற தலைவர்கள் யாரும் அவரைப்போல நடந்து கொள்வதில்லை. கட்சி தலைவரை பொறுத்தவரை அவர் மிகச்சரியாக செயல்படுகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தலைவர்களுக்கு அவர் உரிய மரியாதை கொடுக்கிறார். தலைவரின் இந்த ஜனநாயக வழியை மற்றவர்கள் பின்பற்றுவதில்லை. சென்னையில் இருந்து வருபவர்களை ரயில்நிலையத்திற்கு சென்று கண்டிப்பாக வரவேற்க வேண்டும் என்று கட்சியில் சட்டதிட்டமோ, விதியோ இல்லை. இதை நான் பலதடவை விளக்கி விட்டேன். மதுரையில் நடந்த சம்பவம் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் என்னை சந்தித்து விளக்கம் கொடுத்தனர். திமுக மேலிடம் கேட்ட விளக்கத்திற்கு உரிய பதிலை அனுப்பியுள்ளனர்.
ஸ்டாலின் மதுரை வந்தது பற்றி எனக்கு முறைப்படி எந்த தகவலும் சொல்லப்படவில்லை. எனவே அவரது மதுரை நிகழ்ச்சிகளை புறக்கணிக்குமாறு நான் என் ஆதரவாளர்களிடம் அறிவுறுத்தியதில் எந்த தவறும் இல்லை. கட்சியில் ஒருவர் ஒரு பதவி தான் வகிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயராமன் மண்டல தலைவர் பதவியையும் வகித்து வருகிறார் அது எப்படி? இவ்வாறு அவர் கூறியுள்ளார். மு.க.அழகிரியின் இந்த ஆவேச பேட்டியால் திமுக தலைமை கழகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியின் மோதலை எப்படி சமாளிப்பது என்று திமுக தலைவர் கருணாநிதி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.