எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் மூலம் கொள்ளையர்கள் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் தனியார் ஓட்டலில் தகவல் தொழில் நுட்பம் மூலம் மக்களை ஒருங்கிணைப்பது தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
நமது தாத்தா, பாட்டி காலத்தில் தகவல் பரிமாற வேண்டுமென்றால் தபால் அட்டையில் செய்தி எழுதி அனுப்பி அது சம்மந்தப்பட்டவர்களுக்கு கிடைக்க 15 நாட்கள் வரை ஆகும். ஆனால் தற்போது அமெரிக்காவில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்தால் அடுத்த நொடியே வீடியோவுடன் நமக்கு தெரிய வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள கால அவகாசத்தில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும் என மனிதர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வீட்டில் இருந்தவாறே அரசு சலுகைகள், சான்றிதழ் பெற வேண்டும் என மக்கள் எண்ணுகின்றனர். அந்த வகையில் தற்போது அதனை மக்கள் வீட்டிலிருந்தவாறே பெற தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துள்ளது.
தமிழக அரசு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், மனை பட்டா, பட்டா மாற்றம், பிறப்பு இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி வருகிறது . அதன்படி ஆன்லைன் மூலம் 2 கோடி பேர் சான்றிதழ்களை தமிழகத்தில் பெற்றுள்ளனர். அதே போன்று TNSMRT என்ற ஆப்பை அறிமுகப்படுத்திய பெருமை தமிழக அரசின் ஓய்வு பெற்ற வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலை சாரும். இந்த ஆப் தற்போது ஐ.நா.சபை கூட்டத்தில் கூட பாராட்டு பெறக் கூடிய அளவிற்கு சாதனை படைத்துள்ளது. உலகில் உள்ள 130 கோடி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றால் அது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மட்டுமே சாத்தியம்.
கடந்த காலங்களில் பள்ளிகளில் மாணவர் பதிவேடு எடுக்க சுமார் 15 நிமிடங்கள் வரை தேவைப்படும். தற்போது மாணவர்களின் முகத்தை காட்டினாலே அரசு பள்ளிகளில் வருகை பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் கிடைக்கின்றன. அந்த அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் இந்த அளவிற்கு தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு இன்றைய தலைமுறையினரே காரணம், ஆகவே அவர்களை பாராட்ட வேண்டியது அரசின் கடமை.
கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு ஒரு குற்றம் நடந்தால் குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தில் உள்ள ரைட்டர் மேலதிகார்களுக்கு அய்யா என்று விளித்தபடி கடிதம் எழுதுவார். அந்த கடிதம் குறிப்பிட்ட மேலதிகாரிகளுக்கு கிடைப்பதற்குள் அந்த கொள்ளையர்கள் வடமாநிலத்திற்கு தப்பி ஓடி விடுவார்கள். ஆனால் இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. ஒரு குற்றம் நடந்ததும் அங்கு எப்படி கொள்ளை நடந்தது, ஓட்டை போடப்பட்டது எப்படி, கொள்ளையர்கள் நுழைந்தது எவ்வாறு என்பது பற்றி வாட்ஸ் அப் மூலம் உடனடியாக வந்து விடுகிறது. வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் மூலம் கொள்ளையர்கள் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
தகவல் தொழில் நுட்பத்துறைக்கு பல்வேறு முகங்கள் உண்டு. சுகாதாரத்துறை, சமூகநலத்துறை, காவல்துறை என்று அனைத்து துறைகளுக்கும் எங்கள் முகங்கள் இருக்கின்றன. எங்களை போன்ற அரசியல் வாதிகளுக்கும் தகவல் தொழில்நுட்ப மேம்பாடு மிகப்பெரிய வரபிரசாதமாகும். அமைச்சர் எங்கே இருக்கிறார் என்பதை செல்போன் மூலம் உடனடியாக தெரிந்து கொள்ள முடிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நான் உள்ளிட்ட அமைச்சர்களும் அமெரிக்காவுக்கு சென்றிருந்தோம். நாங்கள் அமெரிக்காவின் கலிப்போர்னியாவில் இருந்த போது பல்வேறு தகவல்கள் வாட்ஸ் அப் மூலம் உலகம் மூலம் சென்றடைந்தது கலிபோர்னியாவில் போக்குவரத்து விவரங்களை கூகுள் மூலம் அறிய முடிகிறது. இந்த பக்கம் வாகனங்களை இயக்கி சிக்கி கொள்ளாதீர்கள். அங்கு போலீசார் இருக்கிறார்கள் என்று கூகுள் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவிலும் நம்ம ஊர் இட்லியும், சாம்பாரும் கிடைக்கிறது. கலிபோர்னியாவில் தமிழர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அங்கு முக்கியமான தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரம் பேரில் ஐநூறு பேர் நம்முடைய தமிழர்கள் என்று நமக்கு கிடைத்த பெருமையாகும். இன்றைக்கு மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கீழடி குறித்த ஆய்வு தகவல்கள் தகவல் தொழில்நுட்பம் மூலம் நமக்கு உடனடியாக வந்து சேர்கிறது.
தற்போது மனிதன் அனைத்தும் எளிமையாகவும், விரைவாகவும், உடனடியாகவும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறான். மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் அரசு உள்ளது. ஆகவே தகவல் தொழில் நுட்பத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி மீண்டும் செல்ல வேண்டியது கட்டாயமாகிறது. அந்த வகையில் தமிழக அரசு தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதன் மூலம் தொடர்ந்து தமிழகம் தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பல்வேறு துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த சேவையாற்றிய அரசு முதன்மை செயலாளர்கள் ககன்தீப்பேடி ( வேளாண்மைத்துறை) மதுமது( சமூகநலத்துறை) கூடுதல் டிஜிபி கந்தசாமி ( காவல்துறை) ஆகியோருக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் உதயகுமார் பாராட்டினார்.
இந்திய தொழில்வர்த்தக மேம்பாட்டுக்கழகத்தின் தலைவர் கவிதா தத் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு, மின்னணு நிர்வாக ஆணையர் சந்தோஷ் மிஸ்ரா, எல்காட் மேலாண் இயக்குனர் விஜயகுமார், ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?