முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் வருங்காலங்களில் இன்னும் கவனமுடன் பேச வேண்டும் - வழக்கை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி : ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.  

ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை  ராகுல் காந்தி விமர்சித்து பேசியிருந்தார்.

ராகுல் பேசியதற்கு எதிராக பா.ஜ.க எம்பி மீனாட்சி லேகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, ராகுல் காந்தியின் மன்னிப்பை ஏற்று இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

ராகுல் காந்தி வருங்காலங்களில் இன்னும் கவனமுடன் பேச வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து