எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்புதல் அளித்த கவர்னரை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த மசோதா விஷயத்தில் நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் குறிப்பாக அரசு பள்ளியில் படித்து 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத நிலை உள்ளது.
இதையடுத்து, அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 16-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
40 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இது சம்பந்தமான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணையில் உள்ளது. முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழக அமைச்சர்கள் 5 பேர் குழுவாக சென்று கவர்னரை சந்தித்து மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது, 3 அல்லது 4 வாரத்தில் நல்ல முடிவை அறிவிப்பதாக கவர்னர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 2019-2020 ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் அனுமதி தர காலதாமதம் செய்வதால், அரசாணையை தமிழக அரசு நேற்று முன்தினம் பிறப்பித்தது.
இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள் இடஒதுக்கீடு சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 45 நாட்களுக்கு பின் கவர்னர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். கவர்னரின் ஒப்புதல் செய்தி கிடைத்ததும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். முதல்வருக்கு தங்களது நன்றியையும் பாராட்டையும் அவர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால், மருத்துவப்படிப்பிற்கான கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால், கவுன்சிலிங் விரைவில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை முடித்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கவர்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்த பிறகே தமிழகத்தில் மருத்துவ கவுன்சலிங் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, கவர்னரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக நேற்று மாலை 5.30 மணியளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிலையில் கவர்னர் ஒப்புதல் அளித்தது குறித்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில்,
கவர்னர் ஒப்புதல் அளித்த செய்தி மகிழ்ச்சியான செய்தி. கண்டிப்பாக இந்த ஆண்டே இந்த உள்ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும். நீட் தேர்வு காரணமாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரியில் சேரும் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் எந்த முதலமைச்சரும் எடுக்காத முடிவை நமது முதல்வர் எடுத்தார். ஏழை, எளிய மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் இந்த சட்ட மசோதாவை கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறினார்.
மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறுகையில்,
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. முதல்வர் பசும்பொன் கிராமத்தில் பேட்டி அளித்த போது, நான் அரசு பள்ளியில் படித்தவன். எனவே எனக்கு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் உணர்வு மிக நன்றாக தெரியும் என்று கூறியிருந்தார். இந்த உள்ஒதுக்கீடு வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. முதல்வரின் சீரிய சிந்தனையில் உதித்த கருத்து இது. சரியான நேரத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை வரவேற்று நன்றி தெரிவிக்கிறோம் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
கடந்து வந்த பாதை
மார்ச் 21: நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
ஏப்ரல் 14: உள் ஒதுக்கீடு குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது.
ஜூன் 8: நீதிபதி கலையரசன் தனது அறிக்கையை முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் அளித்தார்.
ஜூன் 15: ஜூலை 14: நீதிபதி கலையரசன் அளித்த பரிந்துரைகள் தொடா்பாக அமைச்சரவைக் கூட்டங்களில் ஆலோசனை நடத்தப்பட்டது.
செப்டம்பர் 15: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வா் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.
அக்டோபர் 5: உள்ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கவர்னருடன் முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் சந்தித்தனர்.
அக்டோபர் 20: உள் ஒதுக்கீடு கோரி கவர்னருடன் அமைச்சா்கள் அடங்கிய குழு சந்தித்தது.
அக்டோபர் 29: சட்டத்தின் மூலமாக அல்லாமல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டது.
அக்டோபர் 30: உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
02 May 2024பாட்னா : இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
02 May 2024புதுடில்லி : அரசுப் பணிகளை ஒழித்து தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ.க.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ’ராபர்’
02 May 2024சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'.