எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி, ஆக.- 15 - தூத்துக்குடி தனியார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 4பேர் உயிரிழந்தனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக தென்மாவட்டங்களில் அதிக தொழில் முதலீடுகள் செய்யப்படும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது. மாவட்டத்தில் பெருகிவரும் அனல்மின் நிலையங்கள் போக ஸ்டெர்லைட், டி.சி.டபிள்யு, இரால் ஏற்றுமதி நிறுவனங்கள், கெமிக்கல் தொழிற்சாலைகள் என பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.தூத்துக்குடியை பொறுத்தவரை புதியதாக அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில் அவ்வப்போது ஏற்படும் விபத்துக்களில் தொழிலாளர்கள் சிக்கி பலியாகுவதும், படுகாயம் அடைவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடிரூமதுரை நான்குவழிச்சாலையில் புதூர்பாண்டியாபுரம் அருகே கீழஅரசரடியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் இந்து பாரத் அனல் மின்நிலையத்தில் நிலக்கரியை பயன்படுத்தி 210மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் நேற்று வழக்கம்போல மின்சாரம் உற்பத்தி பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் காலை 10.30மணியளவில் அனல்மின் நிலையத்தில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. மின்சார உற்பத்திக்காக நிலக்கரியானது கழிவுகள் அகற்றப்பட்டு அதன்பின்னர் கிரஷர் ஹவுசில் அரைக்கப்பட்டு கன்வேயர் பெல்ட் மூலமாக மின்உற்பத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் நேற்று கன்வேயர் பெல்டில் நிலக்கரி கொண்டு செல்லும் போது அதிக அழுத்தம் காரணமாக நிலக்கரியில் தீ பற்றியது. காற்று வேகமாக அடித்த காரணத்தினால் தீ மளமளவென்று பரவி நிலக்கரி அரைக்கப்படும் கிரஷர் ஹவுஸ் பகுதி வரை தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்ததைக்கண்ட அனல்மின் நிலையத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். இதில் சிலர் கன்வேயர் பெல்ட்டின் டவரில் ஏறி தீயை அணைத்தனர்.
தீயை அணைக்க போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தினால் தீ வேகமாக பரவியதுடன் கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் கன்வேயர் பெல்டின் டவரில் நின்றவர்கள் தீ வெப்பத்தில் சிக்கி தவித்தனர். தீயில் இருந்து உயிர் தப்புவதற்காக மேலிருந்து சிலர் கீழே குதித்தனர். இந்த தீ விபத்தில், அசாம் மாநிலத்தின் குல்காப் மாவட்டத்தை சேர்ந்த குரியாசாகிப் மகன் கூகுக்லி(வயது 19), கோரம்பள்ளம் மாதவன்நாயர் கிழக்குத்தெருவை சேர்ந்த பெருமாள் மகன் மால்ராஜ்(47), கழுகுமலை இந்திரபிரம்மதேசம் தெருவைச் சேர்ந்த காளிதாஸ் மகன் லவக்குமார்(22), ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்த மனோகரன் மகன் சக்தி(28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
படுகாயம் அடைந்த சரவணக்குமார்(33), சுடலைமுத்து(35), நாகேந்திரன்(22), சார்லஸ்(31), சுரிையநாராயணன்(21) ஆகியோர் தூத்துக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட், தூத்துக்குடி மற்றும் ஸ்டெர்லைட் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ்டுபட்டனர். சுமார் 7மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஒரளவிற்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதும் மேலும் தீ பரவாமல் தடுக்க அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரிகள் அனைத்தும் நீருற்றி குளிர்விக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் மற்றும் கேபிள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. சேதமதிப்பு பலகோடி ரூபாயக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கலெக்டர் ஆஷிஷ்குமார் உடனடியாக சம்பவஇடத்திற்கு சென்று பார்வையிட்டு மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி விபத்திற்கான காரணம் குறித்து அறியுமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் உத்தரவின்பேரில் கோவில்பட்டி கோட்டாட்சியர் பொன்னியின்செல்வன் தீ விபத்து பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து எஸ்.பி.,ராஜேந்திரன், ஏ.எஸ்.பி., மகேஷ், டி.எஸ்.பி., நாராயணன், தீயணைப்பு தடுப்பு மீட்புபணித்துறை உதவி இயக்குநர் சாகுல்ஹமீது ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பாதுகாப்பு கருதி புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் செல்வம், தென்பாகம் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தெர்மல் அனல்மின்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருமுறை ஏற்பட்ட தீ விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான கன்வேயர் பெல்ட் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி தனியார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள நான்கு தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
படவிளக்கம்
தூத்துக்குடி தனியார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீ பற்றி எரியும் காட்சி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?