எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஆக.- 20 - கிரானைட் முறைகேடு வழக்கில் கைது செய்யப் பட்ட கிரானைட் அதிபர் பி.ஆர்.பி. நேற்று இரவு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பகுதி களில் கடந்த திமுக ஆட்சியின் போது சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது சம்பந்தமாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை 18 குழுக்கள் அமைத்து ஆய்வு செய்தார். அவரும் கிரானைட் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், கால்வாய்கள், வாய்க்கால் புறம்போக்குகள் உள்ளிட்ட பல்வேறு அரசுக்கு சொந்தமான இடங்களை தனியார் கிரானைட் நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி ஆக்கிரமித்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இந்த குழுவினர் கடந்த 2ம் தேதி முதல் கிரானைட் குவாரிகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். அரசு விதிமீறல், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் நிறுவனங்கள் மற்றும் கிரானைட் அதிபர்கள் மீது 13 வழக்குகள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தவிர கிரானைட் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கிரானைட் நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் கிரானைட் முறைகேட்டில் பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிக அளவில் ஈடுபட்டிருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேலூர் தெற்கு தெருவில் உள்ள பிஆர்பி எக்ஸ் போர்ட்ஸ் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அன் சுல்மிஸ்ரா, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக சோதனை நடத்தி அலுவலகம், தொழிற் சாலைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் பிஆர்பி நிறுவனத்தின் மூலம் இயங்கி வந்த 2 பஸ்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அந்த 2 பஸ்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சொந்தமான லாரிகள் மற்றும் பல வாகனங்களின் உரிமங்கள் முடக்கப்பட்டது. இதற்கிடையில் முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் அதிபர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகளில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த பிஆர்பி நிறுவன அதிபர் பி.பழனிச்சாமி, அவரது மகன்கள் மற்றும் சிந்து கிரானைட் அதிபர் பி.கே.செல்வராஜ், ஒலிம்பஸ் கிரானைட் இயக்குநர்கள் நாகராஜ், மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் 13 பேர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்க ப்பட்டு, வருகிற 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் அதிபர் பி.பழனிச்சாமி நேற்று முன்தினம் மதியம் 12.50 மணியளவில் வழக்கறிஞர்கள் பால்கனகராஜ், பீட்டர் ரமேஷ், சங்கர நாராயணன் ஆகியோருடன் ஒரு காரில் மதுரை சர்வேயர் காலனி யில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு மனுவுடன் வந்தார். பின்னர் காரை விட்டு இறங்கி தனது வழக்கறிஞர்கள் புடை சூழ சூப்பிரெண்டு அலுவலகத்திற்குள் பி.பழனிச்சாமி சென்றார். அப்போது அங்கிருந்த ஏடிஎஸ்பி மயில்வாகனனிடம் மனுவை கொடுத்து போலீசில் சரண் அடைந்தார். அப் போது மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன் வெளியே சென்றிரு ந்ததால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரும் எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பி.பழனிச்சாமி போலீஸ் எஸ்பியிடம் மனு ஒன்று கொடுத்தார். தான் போலீசில் சரண் அடைவதாக தெரிவித்தார். பின்னர் போலீசில் சரண் அடைந்த கிரானைட் அதிபர் பி.பழனிச்சாமியிடம் எஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து பகல் 1.30 மணியளவில் பி.பழனிச் சாமியை போலீசார் வேனில் ஏற்றி சென்று வேறு ஒரு ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று மேலும் விசாரணை நடத்தினர்.
போலீசில் சரணடைந்த பி.பழனிச்சாமி போலீசார் விசாரணை நடத்திய பின்னர் நேற்றுமுன்தினம் இரவு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பி.பழனிச்சாமியை போலீசார் நேற்று இரவு தபால் தந்திநகர் மெயின் ரோட்டில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கண்ணன் வீட்டிற்கு கொண்டு வந்து அவர் முன்னிலையில் கிரானைட் அதிபர் பி.பழனிச்சாமியை போலீசார் ஆஜர்படுத் தினர். பழனிச்சாமியை வருகின்ற 31.8.2012-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி கண்ணன் உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து கிரானைட் அதிபர் பி.பழனிச்சாமி போலீஸ் வேனில் ஏற்றப் பட்டு மதுரை மத்திய சிறைக்கு கொண்டுவரப் பட்டு அடைக்கப்பட்டார். முன்னதாக நீதிபதி கண்ணனிடம் பி.ஆர்.பி. சார்பாக ஆஜரான வீரகதிரவன் கொடுத்த ஜாமீன் மனுவையும் நீதிபதி கண்ணன் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
02 May 2024பாட்னா : இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
02 May 2024புதுடில்லி : அரசுப் பணிகளை ஒழித்து தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ.க.