எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 27 - சென்னை கிண்டி ஐ.ஐ.டி. வளாகத்தில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்பட கலைஞர் தாக்கப்பட்டதற்கு அந்த நிறுவனம் சனிக்கிழமை மன்னிப்பு கேட்டது. அதேவேளையில் அவர்கள் பதிவு செய்த பொய் வழக்கையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு:- சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் எம்.டெக்., முதலாம் ஆண்டு படித்த மாணவி மெருகு மானஸா விடுதி அறையில் செவ்வாய்க் கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக அங்கு புகைப்படம் எடுக்கச்சென்ற தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமப் புகைப்பட கலைஞர் ஆல்பின் மாத்யூ, விடுதியையும், அங்கு துயரத்துடன் நின்றுகொண்டிருந்த மாணவர்களையும் புகைப்படம் எடுத்தார். அப்போது அங்கு வந்த காவலாளிகள் 5 பேர் மற்றும் பேராசிரியர் பிரகாஷ், எம்.மய்யா புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும், எடுத்த புகைப்படங்களை அழிக்கக் கோரியும் ரத்த காயம் ஏற்படும் வரை தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று ஆல்பினை அங்கிருந்து மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது ஆல்பின் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் பேராசிரியர் பிரகாஷ் எம்.மய்யா மற்றும் 5 காவலாளிகள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆல்பினை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர்கள் பெருநகர காவல் ஆணையாளர் ஜே.கே.திரிபாதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். ஆணையாளர் திரிபாதி 2 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக பத்திரிகையாளர்களிடம் உறுதி அளித்தார். இதற்கிடையே ஐ.ஐ.டி. சார்பில் தங்களது விடுதிக்குள் அடையாளம் தெரியாத பத்திரிகை புகைப்பட கலைஞர் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்ததாகவும், மாணவிகளை அவமதித்ததாகவும், மானபங்கம் செய்ததாகவும் புகார் செய்தனர். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே ஆல்பின் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்காக ஐ.ஐ.டி. காவலாளிகள் வெங்கடேஷ், பிரேம்ஆனந்த், சைமன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே கூடுதல் ஆணையர் பி.தாமரைக்கண்ணன், இணை ஆணையர்கள் கே.பி.சண்முகராஜேஸ்வரன், ஆர்.எஸ்.நல்லசிவம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் பத்திரிகையாளர்களின் சில கோரிக்கைகளின் மீது உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி ஐ.ஐ.டி. பதிவாளர் சிவபிரசாத், டீன் (கல்வி) கே.ராமமூர்த்தி ஆகியோர் அனைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஆல்பின் தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கோரினர். பின்னர் தாங்கள் தொடர்ந்த பொய் வழக்கை திரும்பப் பெறுவதாக உறுதியளித்தனர்.
இதில் ஆல்பின் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதேவேளையில் ஐ.ஐ.டி. தரப்பினர் சனிக்கிழமை இரவு 8 மணி வரை தாங்கள் தொடர்ந்த பொய் வழக்கை திரும்பப்பெற வில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
வன்முறைக்கு 2 வீரர்கள் பலி: உறுதியான நடவடிக்கை எடுப்போம்: மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் உறுதி
28 Apr 2024இம்பால், சி.ஆர்.பி.எப்.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி. செயலிழந்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுறுத்தல்
28 Apr 2024கோவை, நீலகிரியில் ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி.
-
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து: கேரள கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு
28 Apr 2024பாலக்காடு, ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.