முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜரத்தில் இன்று முதல் அனைத்து நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு

செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

குஜராத்தில் இன்று 28-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு குஜராத்தில் இன்று முதல் மே 5- ம் தேதி வரை  மாநிலம் முழுவதும் உள்ள 29 நகரங்களில்  இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.  இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக குஜராத்தில் உள்ள 20 பெரு நகரங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், மாநிலம் முழுவதும் மத தலங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது. பூஜைகள் செய்ய மட்டுமே அனுமதி உண்டு.   பொது போக்குவரத்து 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் இறுதி சடங்கு நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு எனவும் குஜராத் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து