எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரேயஸ் ஐய்யருக்கு ரிக்கி பாண்டிங் வாழ்த்து
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கான்பூரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக ஸ்ரேயஸ் ஐயர் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் டெஸ்ட் அணியில் இடம் பிடித்த ஐயருக்கு ஆஸ்திரேலிய அணியில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டுவீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் செய்த கடின உழைப்புக்கு தற்போது இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இதற்கு நீங்கள் தகுதியானவர். இது ஆரம்பம் மட்டுமே. உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன்". என்று தன்னுடைய பதிவில் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ரிக்கி பாண்டிங், ஸ்ரேயஸ் ஐயர் விளையாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
_______________
மே.இ.தீவுக்கு எதிரான டெஸ்ட்:
இலங்கை அணி அபார வெற்றி
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 386 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 230 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.
அடுத்து 156 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் கருணாரத்னே (83 ரன்), மேத்யூஸ் (69 ரன்) அரைசதம் அடித்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 348 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் அணி இண்டீஸ் 160 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் கேப்டன் கரணரத்னே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
____________
பெண் குழந்தை பிறந்தது:
புவனேஸ்வர் குமார் தகவல்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். இந்திய அணிக்காக 21 டெஸ்டுகள், 119 ஒருநாள், 55 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 31 வயது புவனேஸ்வர் குமார். 2017-ல் நுபுர் நாகரைத் திருமணம் செய்தார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, நியூசிலாந்து டி20 தொடர் ஆகியவற்றில் பங்கேற்றார்.
இந்நிலையில் பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளதாக ட்விட்டரில் புவனேஸ்வர் குமார் அறிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் புவனேஸ்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
_______________
கான்பூர் முதல் டெஸ்ட் குறித்து
ஆடுகள வடிவமைப்பாளர் தகவல்
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கான்பூர் மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளர் ஷிவ் குமார், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளத்தைத் தயாரிக்கும்படி பிசிசிஐயிடமிருந்தோ இந்திய அணி நிர்வாகத்திடமிருந்தோ எனக்கு உத்தரவு எதுவும் வரவில்லை. ஒரு நல்ல ஆடுகளத்தைத் தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நவம்பர் மாதத்தில் ஆடுகளத்தின் கீழே ஈரத்தன்மை இருக்கும். எனினும் இது உறுதியான ஆடுகளம். அவ்வளவு சுலபத்தில் விரிசல் அடையாது. சமீபகாலமாக மூன்று நாள்களில் டெஸ்ட் ஆட்டங்கள் முடிவடைந்து விடுகின்றன. அதற்குக் காரணம் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக டி20 கிரிக்கெட் மனநிலையுடன் பேட்டர் விளையாடுகிறார்கள். இந்த டெஸ்ட் ஆட்டம் மூன்று நாள்களில் முடிவடையாது என்பதில் நம்பிக்கையாக உள்ளேன் என்றார்.
______________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.