முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 2-வது ஒருநாள் போட்டி: வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா ஆடும் லெவனில் மாற்றம் செய்யப்படுமா?

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பார்ல்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய ஆடும் லெவனில் மாற்றம் செய்யப்படுமா? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அணியில் ருதுராஜ் கெய்ட்வாட் அல்லது சூர்யகுமார் யாதவ் யார் இடம்பெறப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் நிலவுகிறது.

கட்டாயத்தில்...

தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று போலண்ட் பூங்கா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. தென்னாப்பிரிக்கா முதல் போட்டியை வென்ற காரணத்தால் இந்த போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் களம் இறங்குகிறது.

கெய்க்வாட்...

இந்திய அணி நிச்சயம் ஆடும் லெவனில் மாற்றங்களை மேற்கொள்ளும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். கடந்த போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் படுமோசமாக ஆடியிருந்தனர். அதனால் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற வாய்ப்பு உள்ளதாகவும். இருவரில் ஒருவர் நாளைய ஆட்டத்தின் ஆடும் லெவனில் நிச்சயம் இடம் பிடிப்பர் என சொல்லப்படுகிறது. 

வலுவான அணி...

கேப்டன் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் களம் இறங்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அப்படி அவர் செய்தால் ருதுராஜ் தொடக்க வீரராக களமிறங்குவார். ராகுல் அந்த மாற்றத்தை செய்ய தவறினால் சூர்யகுமார் யாதவ், கோலிக்கு அடுத்த டவுனில் இறங்குவார் என தெரிகிறது. நிச்சயம் இந்திய அணி இன்றைய போட்டியில் வலுவான ஆடும் லெவனை கொண்ட வெற்றிக் கூட்டணியை அமைக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து