எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப். 11 - ஆந்திராவைச் சேர்ந்த நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அங்காடி தெரு படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகையாக உயர்த்தியது. சமீபத்தில் வெளியான சேட்டை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக முத்தக் காட்சிகளில் நெருக்கமாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை அஞ்சலி தன்னை சித்தி பாரதிதேவி கொடுமைபடுத்துவதாக பரபரப்பு புகார் வெளியானது.
அதன் பிறகு கடந்த 8-ந் தேதி ஐதாராபாத்தில் இருந்த நடிகை அஞ்சலி திடீரென மாயமானார். படப்பிடிப்புக்காக சென்றிருந்த அவர் ஓட்டல் அறையில் இருந்து நைசாக வெளியில் சென்று காரில் ஏறி தப்பிச் சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக அஞ்சலியின் அண்ணன் ரவிசங்கர் போலீசில் அளித்த புகாரில், அஞ்சலியை யாரோ கடத்திச் சென்று விட்டனர் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, சென்னையில் உள்ள நிருபர்களை போனில் தொடர்பு கொண்டு பேசிய அஞ்சலி, தனது சித்தி பாரதிதேவி மற்றும் டைரக்டர் களஞ்சியம் மீது பரபரப்பான குற்றச் சாட்டுகளை கூறினார். 2 பேரும் என்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல் படுகிறார்கள் என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இருவரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனித்தனியாக புகார் மனுக்கள் அளித்துள்ளனர். சித்தி பாரதிதேவி நேற்று முன்தினம் அளித்த புகாரில் அஞ்சலி யாருடைய பிடியிலேயோ இருந்து கொண்டு பேசுகிறார். அவளை யாரோ கடத்தி வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக அஞ்சலி விவகாரத்தில் பரபரப்பும், குழப்பமும் நிலவி வருகிறது. இதற்கிடையே அஞ்சலியின் அண்ணன் ரவிசங்கர் நேற்று போலீசாரை சந்தித்து, வெளிநாட்டில் இருக்கும் தாய் பார்வதி தேவியுடன் அஞ்சலி போனில் பேசினார். அப்போது யாரும் தன்னை கடத்தவில்லை என்று கூறியிருக்கிறார். எனவே நான் கொடுத்த கடத்தல் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால் போலீசார் இதனை ஏற்க மறுத்து விட்டனர். அஞ்சலியை நேரில் பார்க்கும் வரை நீங்கள் கொடுத்துள்ள புகார் மீது விசாரணை நடைபெறும் என்று திட்ட வட்டமாக தெரிவித்து விட்டனர்.
இந்த நிலையில் நடிகை அஞ்சலியின் சித்தி பாரதிதேவி சென்னை ஐகோர்ட்டில் நேற்று ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நடிகை அஞ்சலி கடந்த 8-ந் தேதி எனக்கு எதிரான சில கருத்துக்களை கூறியதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இதை பார்த்த நான் அஞ்சலியை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் சமூக விரோதிகளால் கடத்தி அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகிறேன். எனவே அவரை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கும், வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை அவர் சார்பில் வக்கீல் ஜெயபிரகாஷ் தாக்கல் செய்தார். மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கிடையே தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர் ஒருவரிடம் தன்னுடைய பிரச்சினைகளை அஞ்சலி மனம் விட்டு பேசியுள்ளார். அப்போது அவர் சினிமா தயாரிப்பாளர் ஒருவரை கைகாட்டி அவரை போய் சந்தித்து பேசினால், உனது பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி தருவார் என்று கூறியிருக்கிறார். இதன் பேரிலேயே அஞ்சலி சினிமா தயாரிப்பாளரிடம் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே அவரது வழிகாட்டுதலின் பேரில் விரைவில் அஞ்சலி திரை மறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை போலீசாரும் நடிகை அஞ்சலி எங்கே இருக்கிறார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகை அஞ்சலி தன் மீது கொடுக்கப்பட்டுள்ள கடத்தல் புகாரை முடிவுக்கு கொண்டு வரவும், தன்னைப் பற்றி தினமும் வெளியாகும் தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் போலீசில் சரண் அடைய திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே தமிழகத்திலோ அல்லது ஆந்திராவிலோ உயர் போலீஸ் அதிகாரி முன்பு விரைவில் அவர் ஆஜர் ஆவார் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.