எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லாகூர், மே. 3 - பாகிஸ்தான் சிறைச்சாலையில் கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங், லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலை இந்திய தூதரகத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்படைத்தது. அதனையொட்டி சரப்ஜித் சிங் உடல் நேற்று சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டது. அவரது சொந்த ஊரில் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. .
கடந்த 1990 ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நகரில் குண்டுவெடித்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். அந்த சமயத்தில் சரப்ஜித் சிங் தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் போய்விட்டார். அவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். லாகூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி சரப்ஜித் சிங்கிற்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சக கைதிகள் சிலர் கடந்த 26 ம் தேதி கொடூரமாக தாக்கினர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர், லாகூர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து சரப்ஜித்சிங்கின் சகோதரி, மனைவி மற்றும் 2 மகள்கள், லாகூர் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சந்தித்தனர். சரப்ஜித், நேற்று முன்தினம் மீள முடியாத கோமா நிலைக்குச் சென்று விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்க இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம், இந்தியத் தூதர் வலியுறுத்தியதாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை ஒரு மணியளவில், சரப்ஜித் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவக் குழுவின் தலைவர் செளகத் தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், சரப்ஜித் உயிரிழந்த தகவலை ஜின்னா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சரப்ஜித்சிங்கை சந்தித்து விட்டு நேற்று முன்தினம்தான் அவரது குடும்பத்தினர் இந்தியா திரும்பினர். இந்த நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் அவர்களை தாக்கியது. கடந்த 6 நாட்களாக கோமா நிலையில் உயிருக்குப் போராடிய சரப்ஜித் சிங் உயிரிழந்தது, அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சரப்ஜித்சிங்கின் உடலை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதனை ஏற்று சரப்ஜித் சிங் உடலை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதகரகத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதனையடுத்து இஸ்லாமாபாத்தில் இருந்து ஒரு சிறப்பு விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்திற்கு கொண்டுவரப்பட்டது. சரப்ஜித் உடலுக்கு அவரது குடும்பத்தினர் செய்ய வேண்டிய சடங்குகளை செய்துகொண்டியிருக்கின்றனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் உவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனையடுத்து சரப்ஜித் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. சரப்ஜித் மரணத்தையொட்டி பஞ்சாப் மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரப்ஜித் சிங் மறைவிற்கு பாராளுமன்றத்திலும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல