எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.20 - ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சூதாட்டம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 7 தரகர்களை பிடிக்க சிபிசிஐடி போலீசார் 10 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். சென்னையில் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியாக கருதப்படும் பிரசாந்த் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் மற்றும் 14 தரகர்களை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு நடந்த இந்த சூதாட்டத்தில் மும்பை, தமிழ்நாடு, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து டெல்லி போலீசார் வெளிமாநில போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தனர். அதன் பேரில் தமிழ்நாட்டில் கடந்த 16-ம் தேதி இரவு சென்னை முழுவதும் 20 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.
இதில், 6 தரகர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரொக்கம், 10 லேப்டாப், 15 போன்கள் கைப்பற்றப்பட்டன. இவர்களில் முக்கிய நபராக கருதப்படும் அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்த 6 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பை சோதனை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள சூதாட்ட தரகர்களுடன் உள்ள தொடர்பு குறித்த தகவல் தெரிய வந்தது.
இதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார், தமிழக போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தனர். அதன் பேரில் கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பலரை பிடிக்க தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 20-க்கும் மேற்பட்ட சூதாட்ட தரகர்கள் கைது செய்யபடலாம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் சென்னையில் உள்ள சவுகார்ப்பேட்டை, புரசைவாக்கம், சூளைமேடு பகுதியை சேர்ந்த தலைமறைவாக உள்ள மேலும் 7 தரகர்களை பிடிக்க 10 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சூதாட்ட தரகர்களுடன் ஐ.பி.எல். வீரர்கள் நடத்திய சுமார் 100 மணிநேர செல்போன் உரையாடல்களை இடைமறித்து ஒட்டு கேட்டதன் மூலமாக இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் போலீசார் கூறினர். மேலும், மும்பை, சண்டிகர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள ஓட்டல்களில் ஐ.பி.எல். வீரர்கள் தங்கியிருந்த போது அவர்களை யார் யாரெல்லாம் வந்து சந்தித்தனர்? என்பதை கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட ஓட்டல்களின் சி.சி.டி.வி. பதிவுகளையும் டெல்லி போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். இந்நிலையில், ஐ.பி.எல். சூதாட்டப் புகார் தொடர்பாக ரஞ்சிக் கோப்பை வீரர் பாபுராவ் யாதவை டெல்லி போலீசார் நேற்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மணிஷ் குதேவாவுக்கு நெருக்கமான பாபுராவ், சூதாட்ட தரகர் சுனில் பாட்டியாவை சண்டிலாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கடந்த 15 தினங்களாக சிபிசிஐடி போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாகதான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 20 இடங்களில் சோதனை நடத்தினோம். அதில், 6 பேரை பிடித்து உள்ளோம். இந்த 6 தரகர்களுமே தங்களுக்கென அலுவலகம் அமைத்து உள்ளனர். அங்கு தங்களது சூதாட்ட வேலைகளை அரங்கேற்றியுள்ளனர். இவர்களில் முக்கிய நபராக கருதப்படும் அயனாவரம் பிரசாந்தை உட்பட 7 பேர் தலைமறைவாக உள்ளனர்.
தற்போது, அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். அவர்கள் பிடிபடும் பட்சத்தில் சூதாட்ட புகார் தொடர்பாக மேலும் முக்கிய புள்ளிகள் பலர் பிடிபடுவர்' என்றார். இதற்கிடையே, சென்னையில் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியாக கருதப்படும் பிரசாந்த் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்ட பிரசாந்த், நேற்று தனது வழக்கறிஞருடன் வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரண் அடைந்தார். டெல்லியில் பதுங்கியுள்ள மற்றொரு முக்கிய புள்ளி அகுஜா குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக பிடிபட்ட 6 தரகர்களை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்
28 Apr 202410 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
28 Apr 2024லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி. செயலிழந்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுறுத்தல்
28 Apr 2024கோவை, நீலகிரியில் ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி.