எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூன்.20 - உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் மேலும் 9 பேர் இறந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. ருத்ரபிரயாக், சமோலி ஆகிய மாவட்டங்களிலிருந்து இதுவரை 2700 யாத்ரீகர்கள் மீட்கப்பட்டனர்.
இந்த மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார். பத்ரிநாத் புனித ஸ்தலத்தில் 12000 பேர் சிக்கித் தவித்துள்ளனர்.உத்தரகாண்ட் மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்துள்ளது என்று இந்தோ- திபெத்தியன் எல்லைப் பகுதி போலீஸார் தெரிவித்தனர். காலநிலை ஓரளவு சீரானதால் 3 பட்டாலியன் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு இதுவரை 1000 பேரை மீட்டுள்ளனர் என்று அஜய் சதா கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை செயலர் ஆர்.கே. சிங் கூறினார். அமைச்சக அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்துவதற்கு முன்னர் சதா இதை நிருபர்களிடம் தெரிவித்தார்.
கேதார்நாத் வனப் பகுதி உள்ள பன்சிநாராயண் பகுதியிலிருந்து மேலும் 9 சடலங்ளை கிராமவாசிகள் மீட்டனர் என்று துயர்துடைப்பு நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். கங்காரியா, துயந்தர், புல்னா ஆகிய பகுதிகளில் 1500 யாத்ரீகர்களை கிராமவாசிகள் மீட்டதாக சமோலி கூடுதல் மாவட்ட கலெக்டர் சஞ்சய்குமார் தெரிவித்தார். காலநிலை ஓரளவு சாதகமாக உள்ளதால் மேலும் பல யாத்ரீகர்களை மீட்டதாகவும், பத்ரிநாத்தில் மேலும் 12 ஆயிரம் பேர் தவிப்பதாகவும் தெரிவித்தார்.
கேதார்நாத்திலிருந்து 12 00 பேர் வெளியேற்றப்பட்டதாக ருத்ரபிராயாகை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதுதான் எங்களது முக்கியப்பணி. இதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதற்குப் பிறகு இறந்தவர்களது சடலங்களை மீட்கிறோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரகாண்டில் இதுவரை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.
இமாச்சலபிரதேசத்தில் 2-வது நாளாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கின்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இரு விமானமும், ஒரு ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெலிவிஷன் மற்றும் பத்திதிரிகை நிருபர்களை மீட்க ஒரு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர். எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகள், முதியோர், சுகவீனமடைந்தவர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் தரப்பட்டு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது என்று இமாச்சல பிரதேச தலைமைச் செயலாளர் தருண்ஸ்ரீதர்
தெரிவித்தார்.
நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக இந்துஸ்தான் திபெத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசக்தில் சதா ஆற்றில் வெள்ளம் சிவப்பு அடையாளத்தை தாண்டி செல்கிறது. இதுபோல் ரப்தி, காக்ரா, புரிரப்தி, ரோஹினி, குனோ ஆகியவற்றிலும்அதிக வெள்ளம் செல்கிறது என்று மத்திய நதிநீர் குழு செய்திகள் தெரிவித்தன.
நேபாளத்திலுள்ள பன்பசாவில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றில் உள்ள பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரியானா, உ.பி. ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளன.
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து வருவதால் முஸாபர்நகர், ஷாம்லி மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. எதற்கும் மக்கள் பயப்படத் தேவையில்லை. டாக்டர்கள் ஆங்காங்கே சிகிச்சை அளித்து வருகின்றனர். புகழ்பெற்ற கேதார்நாத்தில் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர். கேதார்நாத் கோவில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை மூலம் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.