எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது மறைவுக்கு தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
“ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவருமான கணேசமூர்த்தி உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அ.கணேசமூர்த்தியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்:
“மதிமுகவின் மூத்த நிர்வாகியும், ஈரோடு மக்களவை உறுப்பினருமான கணேசமூர்த்தி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுகவினருக்கும், கணேசமூர்த்தி அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை:
“ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கணேசமூர்த்தி குடும்பத்தினருக்கும், மதிமுக தலைவர் வைகோ மற்றும் மதிமுக தொண்டர்களுக்கும், தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
“மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான அ. கணேசமூர்த்தி மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. மதிமுக கட்சி ஆரம்பித்த காலத்திருந்தே வைகோவுடன் இணை பிரியாமல் ஒரு போர்ப்படைத் தளபதியாக இருந்தவர் அ.கணேசமூர்த்தி.
ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும், மதிமுக செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்:
“மதிமுக மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பாராளுமன்றத்தில் தொகுதி மக்களுக்காக குரல் கொடுத்தவர். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்5 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2024.
09 May 2024 -
உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி ஆந்திராவில் பறிமுதல்: 2 பேர் கைது
09 May 2024ஐதராபாத், ஆந்திராவில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 May 2024சிவகாசி, சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தன.
-
இண்டியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திக்க இன்று டெல்லி பயணம்
09 May 2024புது டெல்லி, இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக இன்று டெல்லி செல்ல உள்ளனர்.
-
வரும் 12-ம் தேதி 7 மாவட்டங்களில் மழை பெய்யும்: தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
09 May 2024சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஜார்க்கண்ட் கவர்னர் தரிசனம்
09 May 2024திருச்சி, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
மர்மமாக உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் செல்போனை தீவிரமாக தேடும் காவலர்கள்
09 May 2024நெல்லை, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கே.பி.கே.
-
பா.ஜ.க.வுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? ராகுல், பிரியங்காவுக்கு ஸ்மிருதி சவால்
09 May 2024அமேதி, பா.ஜ.கவுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? என்று ராகுல், பிரியங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார்.
-
இம்ரான்கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம்
09 May 2024கராச்சி, இம்ரான் கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 14-ம் தேதி திறப்பு
09 May 2024திருவனந்தபுரம், வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
-
வடகொரிய அதிபரின் குடும்ப பிரச்சார ஆலோசகர் உயிரிழப்பு
09 May 2024பியாங்கியாங், வடகொரியாவில் கோயபல்ஸ் என்று அழைக்கப்படும், வடகொரிய அதிபரின் குடும்ப பிரச்சார வியூக ஆலோசகர் கிம் கி நாம் உயிரிழந்தார். அவருக்கு வயது 94.
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று கோலாகல தொடக்கம்: சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரம்
09 May 2024ஊட்டி, ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
2-வது நாளாக விடுப்பு எடுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம்
09 May 2024புதுடெல்லி, 2-வது நாளாக விடுப்பு எடுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
-
வாரணாசியில் வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணி
09 May 2024வாரணாசி, வரும் 14-ம் தேதி வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக 13-ம் தேதி பிரதமர் மோடி அங்கு பிரம்மாண்டமான பேரணி நடத்தவுள்ளார்.
-
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான தடையை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தக்கோரி மனு: பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
09 May 2024சென்னை, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது.
-
ஆட்சிக்கு வந்ததும் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி தகவல்
09 May 2024புதுடில்லி, 'இன்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்' என எக்ஸ் சமூகவலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வீடியோ வெளியிட்டு தெரிவித்த
-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: இணையதளம் - மொபைல் மூலம் அறிந்து கொள்ளலாம்
09 May 2024சென்னை, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை வெளியாகிறது.
-
தமிழகத்தின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 May 2024சென்னை, தமிழகத்தின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
09 May 2024சென்னை, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
செப். 17 முதல் அக். 16 வரை இலங்கையில் அதிபர் தேர்தல்
09 May 2024கொழும்பு, இலங்கையில் வரும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை அதிபர் தேர்தல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ம.பி.யில் தீயில் எரிந்த இ.வி.எம்: நான்கு வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு
09 May 2024போபால், மத்திய பிரதேசத்தில் தீயில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்ததை அடுத்து பெதுல் மக்களவை தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது
-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: இணையதளம் - மொபைல் மூலம் அறிந்து கொள்ளலாம்
09 May 2024சென்னை, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை வெளியாகிறது.
-
சிகாகோவில் இந்திய மாணவர் மாயம்: ஒரு வாரமாக தேடும் போலீஸ்
09 May 2024சிகாகோ, சிகாகோவில் இந்திய மாணவர் மாயமானது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ஒரு வாரமாக தேடியும் அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.
-
டெல்லியில் இருந்து ஹஜ் புனித யாத்திரை தொடங்கிய பயணிகள்
09 May 2024புது டெல்லி, டெல்லியில் இருந்து ஹஜ் பயணிகளின் புனித பயணம் நேற்று தொடங்கியுள்ளது.
-
இந்திய உள்விவகாரங்களில் தலையிட அமெரிக்கா முயற்சி: ரஷ்யா குற்றச்சாட்டு
09 May 2024மாஸ்கோ, இந்தியாவின் உள்விவகாரங்கள் அமெரிக்கா தலையிட முயற்சிப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது.