எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, செப். 3 - தனித் தெலுங்கானா மாநிலத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றுபட்ட ஆந்திரா கோரியும் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்ட 4 தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும், 5 காங்கிரஸ் எம்.பி.க்களும் ஆக மொத்தம் 9 ஆந்திர எம்.பி.க்களை சபாநாயகர் மீராகுமார் நேற்று மீண்டும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இவர்கள் மீதியுள்ள 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இந்த கூட்டத் தொடரில் இது 2 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலத்தை 2 ஆக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது. இதற்கான அறிவிப்பு பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் ஆந்திராவில் நிர்வாகமே தற்போது ஸ்தம்பித்துப் போய் கிடக்கிறது.
இந்த நிலையில் பாராளுமன்றம் நேற்று 2 நாள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் கூடியது. லோக்சபை கூடியதும் தெலுங்கு தேசம் எம்.பி.க்களான என். கிரிஷ்டப்பா, வேணுகோபால்ரெட்டி, கே.என். ராவ் மற்றும் சிவபிரசாத் ஆகியோர் சபையின் மையப் பகுதிக்கு சென்று தெலுங்கானா அமைவதற்கு எதிராக தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இவர்களில் ஒருவரான சிவபிரசாத் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முகமுடியை எடுத்து அணிந்து கொண்டு ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவாகவும், தெலுங்கானாவுக்கு எதிராகவும் கோஷமிட்டார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.
இதே போல ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களான சாய் பிரதாப், அனந்த வெங்கட்ராமி ரெட்டி, ராஜகோபால், மகுந்தா ஸ்ரீநிவாசலு ரெட்டி மற்றும் பாபிராஜூ ஆகியோர் சபையின் மையப் பகுதிக்கு சென்று கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு நாங்கள் ஒன்றுபட்ட ஆந்திராவையே விரும்புகிறோம் என்று உரத்த குரலில் கோஷமிட்டனர். எங்களுக்கு நீதி வேண்டும் என்றும் இவர்கள் கோஷமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.
சிவபிரசாத் முகமுடி அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சில காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தெலுங்குதேசம் எம்.பி.க்களுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் மீராகுமார் தனது பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி அமளியில் ஈடுபட்ட மேற்கண்ட 9 எம்.பி.க்களையும் 374- ஏ விதியின் கீழ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மழைக்கால கூட்டத் தொடரின் மீதியுள்ள 5 நாட்களுக்கு இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதால் இவர்கள் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இயலாது. இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்து உத்தரவிட்டார் சபாநாயகர் மீராகுமார்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 23 ம் தேதி 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த 12 பேரில் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட 9 எம்.பி.க்களும் அடங்குவர். ஆக, ஒரே கூட்டத் தொடரில் 2 வது முறையாக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அதிரடி நடவடிக்கையை சபாநாயகர் மீராகுமார் எடுத்துள்ளார். ஏற்கனவே இது போன்ற நடவடிக்கையை எடுத்த போது மனமில்லாமல் தான் அந்த முடிவை எடுத்ததாக சபாநாயகர் கூறியிருந்தார். மேலும் பாதுகாப்பு கருதியும் அவ்வாறு செய்ததாக அவர் கூறியிருந்தார். காரணம் சபைக்குள் ஆபத்தான பொருட்களை இவர்கள் கொண்டு வரக் கூடும் என்ற தகவல் கிடைத்ததையடுத்து சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் செய்திகள் வெளியாயின. இந்த சூழ்நிலையில்தான் நேற்று மீண்டும் 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.