எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் எம்.எஸ்.டோனி இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனிடையே தனது நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட டோனி கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே டோனி வேட்டி சட்டை அணிந்திருந்தார் என்று தெரிய வந்துள்ளது.
___________________________________________________________________________
பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
முன்னதாக கடந்த சில சீசன்களாக மகளிரை கவுரவிக்கும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட ஒரு ஆட்டத்தில் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடும். அந்த வகையில் இந்த சீசனிலும் மே 1-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது. இந்த ஆட்டத்துக்கான ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி சர்வதேச மகளிர் தினமான நேற்று முன்தினம் நடந்தது. இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனர் சங்ககரா அறிமுகம் செய்தார்.
___________________________________________________________________________
இறுதிப்போட்டியை கண்டு ரசித்த மக்கள்
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டி மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட்டுள்ளது.
இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் திரையிடப்பட்டுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியை ரசிகர்கள் தங்களது நண்பர்கள், குடும்பத்தினருடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்தனர்.
___________________________________________________________________________
வேதனையில் ரோகித் சாதனை
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று விளையாடின. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக சந்தித்த 15-வது டாஸ் தோல்வி இதுவாகும்.
இந்திய கேப்டனாக ரோகித் சர்மா சந்தித்த 12-வது தோல்வியாகும். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாசில் தொடர்ச்சியாக அதிக தோல்விகளை சந்தித்த கேப்டன் என்ற மோசமான சாதனையில் பிரையன் லாராவுடன் இணைந்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பீட்டர் போரேன் 11 தோல்விகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார்.
___________________________________________________________________________
பும்ரா குறித்து வில்லியம்சன்
இந்தியா - நியூசிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பேட்டி ஒன்றில் நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான வில்லியம்சனிடம், உங்கள் கெரியரில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வில்லியம்சன், 'இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ராதான் நான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர்" என்று கூறினார்.
___________________________________________________________________________
ஷமி மோசமான சாதனை
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 63 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 9 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி 74 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்களை வாரி வழங்கிய 2-வது இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இதில் உமேஷ் யாதவ் 2013-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 75 ரன்கள் வழங்கியதே முதலிடத்தில் உள்ளது.
___________________________________________________________________________
வெற்றிக்காக ரசிகர்கள் பூஜை
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றியிருந்தது.
இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதுமுள்ள ரசிகர்கள் எதிர்நோக்கி இருந்தனர். மறுபுறம் சில ரசிகர்கள் இந்திய அணி வெற்றிக்காக பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபட்டனர். இது குறித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-03-2025.
10 Mar 2025 -
தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவைகள் அறிவிப்பு
10 Mar 2025சென்னை : சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தூத்துக்குடி அருகே ஓடும் பஸ்சை மறித்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
10 Mar 2025தூத்துக்குடி : ஓடும் பஸ்சை மறித்து மாணவனுக்கு அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடுதான் முகவரி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
10 Mar 2025சென்னை : இந்தியாவில் தொழில் நுழைவுவாயிலாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கரூரில் ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவி கடத்தல்; மர்ம நபருக்கு வலைவீச்சு
10 Mar 2025கரூர் : கரூரில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற மர்ம நபர் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
-
பாஸ்போர்ட் ரத்தால் லலித் மோடிக்கு சிக்கல்: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா?
10 Mar 2025போர்ட் விலா: வானுவாட்டு தீவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதால் லலித் மோடிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
-
கனடா புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு
10 Mar 2025டொரண்டோ, கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
சுனிதா வில்லியம்ஸ் வரும் 16-ம் தேதி பூமிக்குதிரும்புகிறார்: நாசா அறிவிப்பு
10 Mar 2025வாஷிங்டன், விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் தேதியை நாசா அறிவித்துள்ளது.
-
அமைதியை நிலைநாட்டுவோம்: சிரிய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் அதிபர்
10 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் அமைதியை நிலை நாட்டுவோம் என்று அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: கனிமொழி
10 Mar 2025புதுடெல்லி, மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்" என்று கூறினார்.
-
டொமினிகன் குடியரசு நாட்டில் சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி மாணவி மாயம்
10 Mar 2025நியூயார்க் : டொமினிகன் குடியரசு நாட்டிற்கு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி மாணவி மாயமானார்.
-
நெல்லை, குமரி உள்பட தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை
10 Mar 2025சென்னை, தமிழகத்தில் மார்ச் 11 ஆம் தேதி (இன்று) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழக எம்.பி.க்களை அநாகரிகமானவர்கள் என்பதா? - மத்திய கல்வி அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
10 Mar 2025சென்னை : நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
-
திருவள்ளூரில் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம்
10 Mar 2025திருவள்ளூர் : தமிழகத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
தமிழர்கள் குறித்த பேச்சுக்கு கனிமொழி எதிர்ப்பு: எனது வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன் : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருத்தம்
10 Mar 2025புதுடெல்லி : தமிழக அரசை, தமிழக எம்.பி.,க்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என நான் கூறினேன் என்று கனிமொழி கூறினார். நான் அவ்வாறு கூறவில்லை.
-
தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுப்பு: தி.மு.க. கடும் எம்.பி.க்கள் அமளி; பார்லி. மக்களவை ஒத்திவைப்பு
10 Mar 2025புதுடெல்லி : தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கடும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
-
நடிகை ரன்யா ராவுக்கு அரசு நிலம்: காங்கிரஸ் அமைச்சருக்கு தொடர்பா? கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு
10 Mar 2025பெங்களூரு, தங்கம் கடத்தல் வழக்கில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு ரன்யா ராவுடன் தொடர்பு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகிறது.
-
போரூர் ஏரியில் மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய ஆண் சடலம்..!
10 Mar 2025சென்னை : போரூர் ஏரியில் மீனுக்கு விரித்த வலையில் ஆண் சடலம் சிக்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி: பா.ம.க. நிழல் நிதி அறிக்கை வெளியீடு
10 Mar 2025விழுப்புரம் : அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று பாமக நிழல் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெம்பக்கோட்டையில் கூடுதல் அகழாய்வு குழிகள் தோண்டும் பணி தொடக்கம்
10 Mar 2025சென்னை, வெம்பக்கோட்டையில் கூடுதல் அகழாய்வு குழிகள் தோண்டும் பணி தொடங்கியுள்ளது.
-
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு
10 Mar 2025சென்னை : லண்டனில் தனது முதல் சிம்பொனி அரங்கேற்றத்துக்பின் திங்கள்கிழமை சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
எடப்பாடி பழனிசாமியுடன் கே.டி.ராஜேந்திர பாலாஜி சந்திப்பு
10 Mar 2025சென்னை, மாபா பாண்டியராஜனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கே.டி.ராஜேந்திர பாலாஜி சந்தித்து பேசினார்.
-
கல்வியில் பா.ஜ.க. அரசின் அரசியல் தலையீட்டை மன்னிக்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்
10 Mar 2025சென்னை, கல்வியில் மத்திய பா.ஜ.க. அரசின் அரசியல் தலையீடு மன்னிக்க முடியாதது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
பார்லி. மக்களவையில் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்க ராகுல் வலியுறுத்தல்
10 Mar 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
ரூ.515 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு அருகே கோத்ரெஜ் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் : ஆயிரம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்
10 Mar 2025செங்கை : 515 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு அருகே கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.