முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதியை நிலைநாட்டுவோம்: சிரிய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் அதிபர்

திங்கட்கிழமை, 10 மார்ச் 2025      உலகம்
Seiya-2025-03-10

Source: provided

டமாஸ்கஸ் : சிரியாவில் அமைதியை நிலை நாட்டுவோம் என்று அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் அதிபர் அல் ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் முற்படுவோம் என்று அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாம் ஒரு சிக்கலான சூழலில் நின்று கொண்டிருக்கிறோம். புதிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளோம். முன்னாள் ஆட்சியாளர்கள், அவர்களுக்கு ஆதரவு தரும் அந்நியர்கள் புதிய கலவரத்தை மூட்டிவிட்டுள்ளனர். நமது ஒற்றுமையை, ஸ்திரத்தன்மையைக் குலைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்படுவார்கள். சாமானியர்களின் ரத்தம் சிந்தக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் மோசமான விளைவுகளை சந்திப்பார்கள். 

இங்கே எல்லோரும் சட்டத்துக்கு முன் சமம். கலவரப் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். சிரிய மக்களின் ரத்தம் படிந்த கைகள் கொண்டவர்கள் வெகு விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். தேசிய ஒருமைப்பாட்டை நாம் பேண வேண்டும். உள்நாட்டில் அமைதி வேண்டும். நாம் அனைவரும் அப்போதுதான் நிம்மதியாக வாழ முடியும்.” என நாட்டு மக்களுக்கு அதிபர் அல் சஹாரா அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி வலியுறுத்தியுள்ளார்.

லடாக்கியா, டர்டோஸ் மாகாணங்களில் கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த 2 தினங்களாக கடும் மோதல் நடைபெற்று வந்தது. பாதுகாப்புப் படையினர் குழுமியுள்ள சோதனைச் சாவடிகள், ராணுவ நிலைகள், ரோந்து வாகனங்களை குறிவைத்து, அல் அசாத் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடியை கொடுத்தனர். இந்த மோதலில் இதுவரை 1,018 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து