முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச் சூடு

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

ஜம்மு, செப். 17 - பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லை சாவடிகள் மீது 3 மணி நேரத்துக்கு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் எஸ்.என். ஆச்சார்யா கூறுகையில், 

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் மெந்தூர் பகுதி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் சிறிய மற்றும் எந்திர துப்பாக்கிகளால் சுட்டது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. எனினும் இந்த மோதலில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்