எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி. ஜூன்.1 - திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளரும் முன்னாள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் அறங்காவலருமான குடமுருட்டி என்பவரை திருச்சி மாநகர போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். அவர் மீது கஞ்சா மற்றும் மது பாட்டில்களை கடத்தியதாகவும், திருச்சி கோட்டை சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தியதாகவும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி திருச்சி மாநகர போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி கோட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு திருச்சி-கரூர் பைபாஸ் ரோட்டில் கார் மூலம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் போலி மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் திருச்சி கோட்டை இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன், சப்-இஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீஸ் படையினர் கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள குடமுருட்டி செக்போஸ்ட் வழியாக வந்த வாகனங்களை அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த வழியாக திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளரும் கம்பரம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவருமான குடமுருட்டி(45) காரில் வேகமாக வந்தார். செப்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் படையினர் குடமுருட்டி சேகரின் காரையும் நிறுத்தி சோதனையிட முயன்றனர். அப்போது குடமுருட்டி சேகர் எனது காரை எதற்காக சோதனையிடுகிறீர்கள் என்று கேட்டு போலீசாருடன் தகராறு செய்தாராம்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் யார் காராக இருந்தாலும் சோதனை நடத்த வேண்டும். அது எங்களது கடமை என்று கூறி குடமுருட்டி சேகரின் கார் கதவையும், பின்புறமுள்ள டிக்கியையும் திறந்து சோதனையிட்டனர். காருக்குள் போலி மதுபாட்டில்களும், சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களும் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த குடமுருட்டி சேகர், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரை குத்த முயன்றதாக கூறப்படுகிறது. அந்த கத்திக்குத்தை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறனின் கைகிழிந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவர் மயக்கம் அடைந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ஊராட்சி தலைவர் குடமுருட்டி சேகர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். உடனே படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் குடமுருட்டி சேகரை திருச்சி மாநகர் முழுவதும் வலைவீசி தேடினார்கள். இதற்கிடையே போலீசாரிடமிருந்து தப்பிய குடமுருட்டி சேகர் சென்னைக்கு செல்வதற்காக ரயில் ஒன்றில் ஏறி சென்னைக்கு புறப்பட்டார்.
அப்போது இந்த தகவலை அறிந்த போலீசார் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்று குடமுருட்டி சேகரை கைது செய்ய காத்திருந்தனர். ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் நின்றது. அப்போது ரயிலுக்குள் பேன்ட், டிசர்ட் போட்டுக்கொண்டு குடமுருட்டி சேகர் பதுங்கி இருந்தார். அவரை சுற்றி வலைத்து போலீசார் கைது செய்து திருச்சி கோட்டை போலீஸ் நிலைத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்தவுடன் அவரை திருச்சி 1வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் இளங்கோ வீட்டிற்கு போலீசார் இரவில் அழைத்து சென்று ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் குடமுருட்டி சேகர் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் வலது கரமாக கடந்த 5 ஆண்டு செயல்பட்டு வந்தார். கடந்த 1சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் என்பவர் எரித்து கொள்ளப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் குடமுருட்டி சேகரையும் அவருடைய தம்பி திமுக இளைஞரணி பிரமுகர் ஆறுமுகம் என்பவரையும் விசாரித்து வந்தனர்.
குடமுருட்டி சேகர் மீது திருச்சி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலுக்காக திருச்சியில் இருந்தி புறப்பட்டபோது கொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் என்பவரின் மனைவியும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவை சந்தித்து தனது கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்திருந்தார். அதை வாங்கிப்படித்த முதல்வர் ஜெயலலிதா துரைராஜ் வழக்கில் சட்டப்படியான நடவடிக்கைகளை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் காவல் துறையினர் முறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் திமுக பிரமுகர் குடமுருட்டி சேகரை போலீசார் கைது செய்திருப்பது திருச்சி மாவட்ட திமுகவினரை கிலியை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்தடுத்து மேலும் சில திருச்சி திமுக பிரமுகர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை12 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
08 May 2024சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை கோர்ட் காவல் நீட்டிப்பு
08 May 2024பெங்களூரு : பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ம.ஜ.த.
-
சர்ச்சை பேச்சு எதிரொலி: காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா திடீர் ராஜினாமா
08 May 2024புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
08 May 2024சென்னை : பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்த 'இன்டியா' கூட்டணி கட்சிகள்: அமித் ஷா
08 May 2024ஹர்தோய், வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தனர் 'இன்டியா' கூட்டணி கட்சிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உ.பி.யில் பிரசாரத்தின் ப
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
08 May 2024டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சு...
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து தனது மருமகனை நீக்கினார் மாயாவதி
08 May 2024லக்னோ, ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், "அவர் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை" கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொற
-
உயிரிழந்தது ஜெயக்குமார்தானா? - டி.என்.ஏ. பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பிவைப்பு
08 May 2024நெல்லை : ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.