முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கான்பூர் குண்டுவெடிப்பில் தேடப்பட்ட குற்றவாளி கைது

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,பிப்.27 - கான்பூரில் நடந்த குண்டுவெடிப்பில் 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நேற்று முன்தினம் தீவிரவாத ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டான். உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி குண்டுவெடித்தது.  இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக முக்கிய குற்றவாளியான முகமத் ஆசாத் சித்திக் என்பவரை தீவிரவாத ஒழிப்பு போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் அவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள நல்லசோப்ரா என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையொட்டி தீவிரவாத ஒழிப்பு பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று கைது செய்தனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கோர்ட்டிலும் அவன் ஆஜர்படுத்தப்பட்டான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்