எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.ஆக.18 - நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
பொதுக்குழுவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, ஆர்யா, டெல்லி கணேஷ், நாசர், பொன்வண்ணன், வையாபுரி, சின்னிஜெயந்த், மனோபாலா, சார்லி, ரவிக்குமார், ஸ்ரீகாந்த், கராத்தே தியாகராஜன், நடிகைகள் சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, சகுந்தலா உள்பட பலர் பங்கேற்றனர்.
பொதுக்குழுவில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நடிகர்–நடிகைகள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினர் ஆகவேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது. ஆனால் சில நடிகைகள் உறுப்பினர் ஆகாமலேயே படங்களில் நடித்து வருகிறார்கள். இது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அடுத்த வருடம் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழுவில் வரவு–செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நடிகர் சங்க பொதுக்குழுவையொட்டி காமராஜர் அரங்கை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரங்கத்திலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நடிகர் சங்க பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டது.
அடையாள அட்டை காண்பித்து கையெழுத்து போட்டவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நாடக நடிகர்களும் இதில் அடங்குவர். உறுப்பினர் அல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
பொதுக்குழுவில் சரக்குமார் பேசும்போது, ‘‘நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 3 மாதத்துக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையில் நடிகர் சங்கம் ஈடுபடும்’’ என்றார்.
நடிகர் விஷால் பேசும்போது, ‘‘நடிகர் சங்கத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததுதான் குறையாக இருக்கிறது. அடுத்த வருடம் சொந்த கட்டிடத்தில் பொதுக்குழுவை நடத்த வேண்டும். நடிகர் சங்க தலைமைக்கு நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன். நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நான் போட்டியிடப்போவதாக வெளிவந்துள்ள செய்தி உண்மை அல்ல.
கேரளாவில் நடிகர் சங்கத்துக்காக நடிகர்கள் இணைந்து படத்தில் நடித்தனர். அதுபோல் நமது நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட நானும், ஆர்யா, கார்த்தி, ஜீவா உள்ளிட்ட நடிகர்களும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
நாடக மேடையில் இருந்து திரையுலகுக்கு வந்து சாதனைகள் படைத்த டி.எஸ்.பாலையாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நூற்றாண்டு விழா நடத்தப்படும். மூத்த கலைஞரும் லட்சிய நடிகருமான எஸ்.எஸ்.ராஜேந்திரனின் நீண்டகால கலை சேவையை பாராட்டி பாராட்டு விழா நடத்தப்படும்.
ரூ.10 கோடி அளித்து சினிமா நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் ரூ.15 கோடி செலவில் 2 குளிர்சாதன படப்பிடிப்பு தளம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்– அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறது. மத்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்ற கமலுக்கு பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக அதிருப்தியாளர்களான பூச்சி முருகன், காஜா மொய்தீன், சுந்தரம் ஆகியோர் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 3 பேரும் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தனர்.
அவர்களை சிலர் முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டவிடாமல் தடுப்பது நியாயமா? என்று கண்டித்து கோஷமிட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு 3 பேரையும் உள்ளே அழைத்து சென்றனர். அங்கும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களை கண்டித்து கோஷம் போட்டனர்.
இதையடுத்து அவர்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் வெளியே வந்து விட்டனர். இதுகுறித்து பூச்சி முருகன் நிருபர்களிடம் கூறும் போது, ‘‘நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பிரச்சினையில் தவறுகள் நடந்துள்ளதால் கோர்ட்டுக்கு சென்று தடை வாங்கினேன். என்னை நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். அதற்கும் கோர்ட்டில் தடை பெற்றுள்ளேன்.
இன்றைய பொதுக்குழுவில் பங்கேற்க எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி போலீஸ் பாதுகாப்போடு பொதுக்குழுவுக்கு வந்தேன். வருகை பதிவேட்டில் கையெழுத்திட என்னை அனுமதிக்கவில்லை. என்னை தரக்குறைவான வார்த்தைகளால் சிலர் திட்டினார்கள். எனவே பொதுக்குழுவில் பங்கேற்க முடியாமல் வெளியே வந்து விட்டேன்’’ என்றார்.
3 பேரையும் எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுந்ததால் பொதுக்குழுவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை12 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
08 May 2024சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை கோர்ட் காவல் நீட்டிப்பு
08 May 2024பெங்களூரு : பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ம.ஜ.த.
-
சர்ச்சை பேச்சு எதிரொலி: காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா திடீர் ராஜினாமா
08 May 2024புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
08 May 2024சென்னை : பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்த 'இன்டியா' கூட்டணி கட்சிகள்: அமித் ஷா
08 May 2024ஹர்தோய், வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தனர் 'இன்டியா' கூட்டணி கட்சிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உ.பி.யில் பிரசாரத்தின் ப
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து தனது மருமகனை நீக்கினார் மாயாவதி
08 May 2024லக்னோ, ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், "அவர் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை" கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொற
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
08 May 2024டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சு...
-
உயிரிழந்தது ஜெயக்குமார்தானா? - டி.என்.ஏ. பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பிவைப்பு
08 May 2024நெல்லை : ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
மோடியின் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் கண்டுள்ளன : நிர்மலா சீதாராமன் தகவல்
08 May 2024புதுடெல்லி : தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி வருகின
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார