எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா - இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் மும்பையை 3-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வீழ்த்தியது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆர்பிஜி நிறுவன துணைத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா, அகில இந்திய கால்பந்து சம்மே ளன தலைவர் பிரபுல் படேல், கால் பந்து விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் தலைவர் நீடா அம்பானி ஆகியோர் இணைந்து ஐஎஸ்எல் தொடர் தொடங்குவதை முறைப்படி அறிவித்தனர்.
தொடக்க விழாவையொட்டி, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் லேசர் ஒளி விளக்கு அலங்காரங்களுடன் நடைபெற்றன. இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நடனமாடினார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, நடிகர்கள் அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், ரண்பீர் கபூர், ஜான் ஆபிரஹாம், நடிகை பர்ணிதி சோப்ரா உட்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் நடைபெறும் இப்போட்டியில் சென்னையின் எப்சி, அட்லெடிகோ கொல்கத்தா, எப்சி கோவா, எப்சி புனே சிட்டி, கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்சி, நார்த் ஈஸ்ட் யுனைடெட், டெல்லி டைனமோஸ் எப்சி ஆகிய 8 அணிகள் பங்கேற் கின்றன. வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில் மொத்தம் 61 ஆட்டங்கள் நடக்கின்றன.
முதல் போட்டியில் கொல்கத்தா மும்பை அணிகள் மோதின. விறுவிறுப்பாகச் சென்ற முதல் பாதி ஆட்டத்தின் 26 ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் கோல் அடித்து, முன்னிலை பெற்றது. கொல்கத்தா அணியின் எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிக்ரு டெபர்ரா, சக வீரர் ஸ்பெயினைச் சேர்ந்த ஜோப்ரி மாட்யூ கடத்திக் கொடுத்த பந்தை, அற்புதமாக மும்பையின் கீப்பர் சுப்ரதா பாலை ஏமாற்றி கோலாக மாற்றினார்.
இதன்மூலம் ஐஎஸ்எல் தொடரின் முதல் கோலை அடித்த வீரர் என்ற பெருமையை பிக்ரு டெபர்ரா பெற்றார். இரண்டாவது பாதி ஆட்டத்தில், 68-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் மத்தியக் கள வீரர், ஸ்பெயினைச் சேர்ந்த போஜ்ரா பெர்னாண்டஸ் தனது அணிக்கான 2-வது கோலை அடித்தார். அதன் பின்னர், மும்பை அணி அடுத்தடுத்து தாக்குதல்களைத் தொடுத்த போதும், கொல்கத்தா அணியின் கோல்கீப்பர் சுபாஷிஷ் ராய் சவுத்ரி அவற்றை அற்புதமாகத் தடுத்தார்.
மூன்று நிமிடங்கள் அளிக் கப்பட்ட கூடுதல் நேரத்தில், ஆட்டம் முடிய சில நொடிகளே இருந்த போது ஸ்பெயினைச் சேர்ந்த அர்னல் லிபர்ட் கோண்டே கார்போ கொல்கத்தா அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார். இதன் மூலம் மும்பையை 3-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வீழ்த்தியது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன: சிபிஐ நீதிமன்றம்
புது டெல்லி, அக்.14-
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் வெளிப்படையற்ற தன்மையில், நேர்மையற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளன என்று சிபிஐ நீதிமன்றம் சாடியுள்ளது.
நிறுவனங்களின் விண்ணப்பங்களை நுணுகி ஆராயாமல், சுரங்க ஒதுகீடுகளை ரகசியமான முறையில், ஏன் அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்பதற்கான காரணங்களை விளக்காமல் செய்திருப்பது பப்ளிக் செர்வண்ட்களின் குற்றவியல் சார்ந்த மோசமான நடத்தையைக் குறிப்பதாகும். “இந்தச் செயல் நாட்டின் இயற்கை வளங்களை தனியார் நிறுவனங்கள் முறையற்ற வகையில் உடைமையாக்கிக் கொள்வதற்கு வழிவகை செய்துள்ளது” என்று சிபிஐ நீதிமன்ற நீதிபதி பாரத் பராசர் சாடியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் நிலக்கரித் துறை செயலர் எச்.சி.குப்தா, அப்போது இணைச் செயலராக இருந்த கே.எஸ்.குரோபா மற்றும் இயக்குனர் கே.சி.சமாரியா ஆகியோருக்கு கோர்ட் சம்மன் அளித்திருந்தது. ஆனால் இவர்கள் மீதான விசாரணை அறிக்கையை சிபிஐ முடிவுக்குக் கொண்டு வந்ததை சிபிஐ கோர்ட் ஏற்க மறுத்து மேற்கூறிய முறையில் சாடியுள்ளது. நிலக்கரி சுரங்க முறைகேட்டில், நிலக்கரித் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை சட்டவிரோதமான முறையில் செய்துள்ளனர் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
சுரங்க ஒதுக்கீட்டிற்கான கடிதங்களை அளிப்பதற்கு முன்பாகவே நிலக்கரித் துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஸ்க்ரீனிங் கமிட்டி ஒதுக்கீடுகளை நேர்மையற்ற முறையில் வழங்கியுள்ளது. அந்த நிறுவனங்களின் தகுதி அடிப்படை குறித்து அவர்களது விண்ணப்பங்களை கூர்ந்து ஆய்வு செய்யவில்லை. என்றும் நீதிமன்றம் சாடியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2024
05 May 2024 -
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.