எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்ற பின்பு முதலாவது மாநில செயற்குழு கூட்டம் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இதில் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இளங்கோவன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சிப்பணி, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து அரசியல் களம் காண வேண்டிய பொறுப்பும் கடமையும் காங்கிரசுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் அரசியல் வியூகங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
* மத்திய அரசின் இந்தி, சமஸ்கிருதம் திணிப்பை வன்மையாக கண்டிக்கிறோம்.
* காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சுய உதவி குழுக்கள் திட்டம் உள்ளிட்டவற்றை முடக்குவதை கைவிட வேண்டும்.
* மானிய விலையில் மண்எண்ணெய் வழங்குவதை ரத்து செய்யும் முடிவை கைவிடவேண்டும்.
* பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் 40 சதவீதம் குறைந்துள்ளது. அதே அளவு இந்தியாவிலும் குறைக்க வேண்டும்.
* காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.
* நெல்லை–தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பயன்பெறும் தாமிரபரணி–கருமேனி, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய நதிகள் இணைப்பு திட்டத்தில் 2009–ல் ரூ.369 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.213 கோடி செலவழிக்கப்பட்ட பின்னர் அந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. உரிய நிதி ஒதுக்கி அந்த திட்டத்தை தொடர வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக முகுல் வாஸ்னிக் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடந்த சில மாதங்களாக மத்திய மோடி அரசு மதவெறியை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி திட்டங்களை முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்தவர்கள் மதவாதத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. அது தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும்.
காங்கிரசில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேறியதும் கட்சி மேலிடத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கு கட்சி மேலிடம் உரிய முக்கியத்துவமும், மரியாதையும் கொடுத்து வந்தது. தமிழக காங்கிரசுக்கும் டெல்லி காங்கிரசுக்கும் இடையே இணக்கமான நல்லுறவு தொடர்ந்து இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மோடியின் அந்தர்பல்டி அரசாங்கம் என்ற புத்தகம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அகில இந்திய செயலாளர்கள் செல்லக்குமார், திருநாவுக்கரசர், ஜெயக்குமார், பிரபு, தங்கபாலு, கார்த்தி ப.சிதம்பரம், ஜெ.எம்.ஆரூண், கோபண்ணா, தாமோதரன், சிரஞ்சீவி மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ, நிர்வாகிகள் நாஞ்சில் பிரசாத், நவாஸ், எஸ்.எம்.குமார், ஆதிஜான்சன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை12 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
08 May 2024சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை கோர்ட் காவல் நீட்டிப்பு
08 May 2024பெங்களூரு : பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ம.ஜ.த.
-
சர்ச்சை பேச்சு எதிரொலி: காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா திடீர் ராஜினாமா
08 May 2024புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
08 May 2024சென்னை : பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்த 'இன்டியா' கூட்டணி கட்சிகள்: அமித் ஷா
08 May 2024ஹர்தோய், வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தனர் 'இன்டியா' கூட்டணி கட்சிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உ.பி.யில் பிரசாரத்தின் ப
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
08 May 2024டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சு...
-
கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து தனது மருமகனை நீக்கினார் மாயாவதி
08 May 2024லக்னோ, ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், "அவர் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை" கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொற
-
உயிரிழந்தது ஜெயக்குமார்தானா? - டி.என்.ஏ. பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பிவைப்பு
08 May 2024நெல்லை : ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
நடுவர்களிடம் வாக்குவாதம்: ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
08 May 2024புதுடெல்லி : டெல்லிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்ப