எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஜூலை.12 - திமுகவினரின் முறைகேடுகளுக்கு துணை போன மேயர் தேன்மொழி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. மதுரை மாநகராட்சி சிறப்பு கூட்டம் மேயர் தேன்மொழி தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஆணையாளர் செபாஸ்டின், அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க, அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க தந்தை பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோர் பாடுபட்டனர். அதே வழியில் எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக தந்து ஏழை மக்களின் இதயங்களின் குடியிருந்தவர் எம்.ஜி.ஆர். அதே போல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 29 சதவீத கிடைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர், மத்திய அரசின் நுழைவு தேர்வுக்கு உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று தலித் மக்களுக்கு உதவி செய்தவர் முதல்வர் ஜெயலலிதா. அதே போல் இலங்கையில் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு முகாம்களில் சித்ரவதைகளை அனுபவித்து வரும் ஈழ தமிழர்களுக்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா.
முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அனைத்து தரப்பு மக்களுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.அண்ணா பிறந்தநாளில் கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்திய திருநாட்டில் தைரியமாக எந்த கருத்தையும் எடுத்துச்சொல்லும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான். தமிழக மக்கள் திமுகவுக்கு சாட்டையடி கொடுத்து, அதிமுகவை வெற்றி பெற செய்திருக்கிறார்கள். இவ்வாறு சாலைமுத்து பேசிக்கொண்டிருக்க, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து பேசிய சாலைமுத்து, திமுகவினர் தண்டனை அனுபவிக்கும் காலம் வந்து விட்டது. கண்மாயில் 20 ஏக்கர் நிலத்தை திமுகவினர் ஆக்கிரமித்து உள்ளனர். இதன் மீதெல்லாம் அரசு நடவடிக்கை எடுக்கும். மதுரை மாநகராட்சி பகுதியில் எங்கு பார்த்தாலும் மீன்கடைகளாக காட்சியளிக்கிறது. துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகிறார்கள். இந்த கடைகளுக்கு மாநகராட்சி முறையாக அனுமதி அளித்துள்ளதா? திமுகவில் இருந்த செல்லத்துரை என்பவர் புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் 36 கடைகளை பெற்றுள்ளார்.
மாநகராட்சி சார்பில் விடப்படும் கடைகள் ஏழைமக்கள் பிழைப்புக்காகாதான் விடப்படுகிறது. ஆனால் இப்படி தனிநபர்கள் சம்பாதிப்பதற்காக விடப்படுவது கண்டிக்கத்தக்கது. மதுரை நெல்பேட்டையில் ஆடு வதை கூடத்தை தனிநபர் வற்புறுத்தலின் பேரில் மாற்றப்பட்டுள்ளது. அதே இடத்தில் மீண்டும் ஆடு வதை கூடம் செயல்பட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியின் போது முறைகேடாக நடந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நானோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ தலையிடமாட்டோம். துணை மேயர் தனது மனைவி பெயரில் ஒரு காம்பள்க்ஸ் கட்டி வருகிறார்.இது மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆணையாளர்:- இது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கி இருப்பதால் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு விலக்கப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை தொடர்ந்து துணை மேயர் குறித்து கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் எழுந்து நின்று சத்தம் போட்டனர். இதன் பிறகு சாலைமுத்து பேசியதாவது, மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரே மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் பெயரில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுடுகாடு அருகில் கட்டிடம் கட்டக்கூடாது என்று விதி முறை உள்ளது. விதிமுறையை மீறி கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும். ஒரு மத்திய அமைச்சர், முன்னாள் முதல்வரின் மகன் இப்படி மாநகராட்சி விதியை மீறலாமா? என்றார். திமுகவினரின் முறைகேடுகளுக்கு துணை போன மேயர் தேன்மொழி ராஜினாமா செய்ய வேண்டும். அவரது சகாக்களும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக, கம்யூனிஸ்ட்கட்சியினர், தேமுதிகவினர் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
விசாரணை கமிஷன் வேண்டும் - மார்க்சிய கம்யூ.வலியுறுத்தல்
மாமன்ற கூட்டத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் குழு தலைவர் கணேசன் பேசும் போது, மாநகராட்சி முலம் நடந்த ரிங்ரோடு வசூல், எகோ பார்க் கட்டணவசூல், சென்ட்ரல் மார்க்கெட் டெண்டர் விட்டது, ராஜாக்கூரில் வீடுகள் கட்டியதில் முறைகேடுகள்,தரமற்ற சாலைகள், ஒப்பந்த ஊழியர்கள் நியமித்ததில் முறைகேடு, மாநகராட்சி சொத்து அபகரிப்பு போன்றவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். திமுகவினரின் முறைகேடுகளுக்கு துணை போன மேயர் தேன்மொழி ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?