எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர் - காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஜீலம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்லுமாறும் அரசு நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்த வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காஷ்மீரில் கடந்த செப்டம்பர் மாதம் ஜீலம் நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ஜீலம் நதியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய காலை நிலவரப்படி, வெள்ள அளவு அனந்தநாக் மாவட்டம் சங்கம் பகுதியில் 22.8 அடியாகவும், ராம் மனுஷி பாக் பகுதியில் 19 அடியாகவும், பந்திபூரா மாவட்டம் ஆஷிம் பகுதியில் 11.55 அடியாகவும் இருந்தது. வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மாவட்ட நிர்வாக அதிகாரி,
வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் உள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு வருமாறும், மாவட்ட நிர்வாகத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜீலம் நதிக் கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
ராஜ்பாக், ஜவஹர்நகர், கோக்ஜிபாக், வாசிர்பாக் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் கூடுதலாக இருப்பதால், இப்பகுதிகளில் வாழும் மக்கள் நேற்று முன்தினம் மாலை முதலே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கினர். ரெசிடன்ஸி சாலை, லால் சவுக் பகுதிகளில் உள்ள வணிகர்கள் தங்கள் கடைகளில் உள்ள பொருட்களை அவசர அவசரமாக இடம் மாற்றம் செய்தனர். கடந்த செப்டம்பர் மாதம் ஜீலம் நதியின் கோரத் தாண்டவத்தில் சிக்கிய பகுதிகளில் இவைகளும் அடங்கும்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழைக்கு பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 80 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழை காரணமாக சிரார் இ சரீப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு 18 வீடுகள், 44 கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலச்சரிவில் சிக்கிய 16 பேரை காணவில்லை. மேலும் மழை வெள்ளத்தில் சிக்கிய 21 பேரும் மாயமாகி விட்டனர். பட்காம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 3 வீடுகள் புதைந்தன. அந்த வீடுகளில் இருந்த 12 பேரும் புதைந்திருக்கலாம் என்று தெரிகிறது. மொத்தம் 49 பேர் பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது. கடந்த சனிக்கிழமை மாலை முதல் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
|
ஸ்ரீநகர்-குல்மார்க், ஸ்ரீநகர்-குப்வாரா, ஸ்ரீநகர்-பந்திப்பூரா இடையேயான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெருமளவில் பாதுக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் வரும் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மழைவெள்ளம் காரணமாக மாநிலத்தின் 7 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஜீலம் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 100 பேர் காஷ்மீர் விரைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் 50 பேர் வீதம் 2 குழுக்களாக மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் தலைவர் ஓ.பி.சிங் கூறியுள்ளார்.
வெள்ள நிலவரத்தை நேரில் பார்வையிட பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி காஷ்மீருக்கு விரைந்துள்ளார். காஷ்மீருக்கு புறப்படும் முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நக்வி, வெள்ள நிவாரண, மீட்புப் பணிகளில் காஷ்மீர் மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார் நிலையில் இருக்கிறது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 6 hours ago |
ஆனியன்ப்ரை1 week 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 4 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனையுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி
15 May 2024மதுரை : மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.