எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.- 24 - சுரங்க ஊழலில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவால் பாரதிய ஜனதாவுக்கு தலைவலி மேலும் அதிகரித்துள்ளது. எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்கும்படி கட்சி மேலிடத்துக்கு நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தென் இந்தியாவில் பாரதிய ஜனதா காலூன்றுவதற்கு முக்கிய பங்கு வகித்தவர் முதல்வர் எடியூரப்பா. தென் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. ஆனால் அவர் முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கி கட்சி மேலிடத்திற்கு பெரும் சிக்கலையும் தலைவலியையும் ஏற்படுத்தி வருகிறார். முதலில் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட பிரதமருடன் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த அமைச்சர்களை அழைத்து செல்லாமல் ஒரு பெண் அமைச்சரை உடன் அழைத்து சென்றார். இதனால் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக அவரது அமைச்சரவையில் உள்ள ரெட்டி சகோதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எடியூரப்பா பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. கடைசியில் கட்சி மேலிடம் தலையிட்டு சமாதானம் செய்தது. இதில் முதல் தடவையாக எடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்பியது. அதனை அடுத்து பாரதிய ஜனதா மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 24 பேர் எடியூரப்பாவுக்கு எதிராக கிளம்பினர். இதனால் அவர் மெஜாரிட்டி எடியூரப்பா மெஜாரிட்டி பலத்தை இழந்தார். சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் அந்த 24 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ளாததால் எடியூரப்பா பதவி இரண்டாவது தடவையாக தப்பியது. அடுத்து பெங்களூர் மற்றும் பல இடங்களில் தனது உறவினர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததாக எடியூரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு தொடர கவர்னர் பரத்வாஜ் அனுமதி அளித்தார். மேலும் கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் எடியூரப்பா அரசை நீக்கிவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை அனுப்பினார். பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து முறையிட்டதால் எடியூரப்பாவின் பதவி 3-வது முறையாக தப்பியது. தற்போது எடியூரப்பா மீது சுரங்க ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. இது விசாரித்து அறிக்கை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு கசிந்து விட்டது. அதில் சட்ட விரோத சுரங்க நிறுவனங்களில் இருந்து எடியூரப்பா லஞ்சம் பெற்றதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் எடியூரப்பாவின் பதவிக்கு நெடுங்கண்டம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் கட்சி மேலிடத்திற்கு அந்த கட்சி தலைவர்களே கோரிக்கை விடுத்து வருகின்றனர். எடியூரப்பாவுக்கு கருணை காட்ட வேண்டாம் என்றும் அவர்கள் கோரி வருகிறார்கள். அறிக்கை வெளியாகட்டும். அறிக்கையை பார்த்த பின்னர் நடவடிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும் என்று கட்சி மேலிடம் கூறினாலும் எடியூரப்பாவுக்கு எதிராக தலைவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இதனால் பாரதிய ஜனதாவுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. மேலும் எடியூரப்பாவால் தார்மீக அடிப்படையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அளவில் ஊழலுக்கு எதிராக பாரதிய ஜனதா போராடி வருகிறது. ஆதர்ஷ் சொசைட்டி ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு, லஞ்சம் மற்றும் கறுப்பு பணம் ஒழிப்பு ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா குரல் கொடுத்துக்கொண்டியிருக்கிற நேரத்தில் எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதோடு காங்கிரஸ் கட்சியின் கையில் ஒரு ஆயுதம் கிடைக்க செய்துவிட்டது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுள்ள பாரதிய ஜனதா லோக்ஆயுக்தா அறிக்கை வெளியாகட்டும் அதை நன்கு ஆய்வு செய்த பின்னர் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எடியூரப்பா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் அவருக்குள்ள செல்வாக்கு குறித்தும் கட்சி கருத்தில் கொண்டுள்ளதாக தெரிகிறது. கட்சி எம்.எல்.ஏ.க்களில் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதோடு கர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்காயத் பிரிவு மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கிறது. எடியூரப்பாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆனந்த குமாரை முதல்வராக்கலாம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. இதற்கு எடியூரப்பா சம்மதிக்காவிட்டால் கர்நாடகத்தில் கட்சியின் வளர்ச்சி பாதிக்கும். அதனால் அரசை கலைத்துவிட்டு இடைத்தேர்தலுக்கு உத்தரவிடுவது குறித்தும் பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் லோக்ஆயுக்தா அறிக்கையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு எத்தகைய தன்மையுடையது என்பதையும் ஆராய்ந்த பின்னரே எடியூரப்பா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையில் எடியூரப்பாவை டெல்லி வரும்படி பா.ஜ. மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அவர் நாளை டெல்லி சென்று கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து தன் மீது அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கலாம் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 min 3 sec ago |
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல