எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தமிழகத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு நேற்று மூன்றாவது நாளாக பார்வையிட்டனர். வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வந்த ஆய்வுக்குழுவினர் அம்மா உணவகத்தில் உணவு உட்கொண்டனர். முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய நிலவேம்பு குடிநீர் வாங்கி அருந்தினர்.,
தமிழகத்தில் அண்மையில் கொட்டித் தீர்த்த வடகிழக்குப் பருவமழையால் கடலூர் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இம்மாவட்டங்களில், உடனடி நிவாரணப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு சேதங்களை விரைந்து சீரமைக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, இப்பணிகளுக்கென உடனடியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி, நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஜெயலலிதா, வெள்ள சேதங்களை முழுமையாக சீரமைக்க, முதற்கட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் 8,481 கோடி ரூபாய் தேவை என்றும், உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில், தமிழகத்திற்கு, முதற்கட்டமாக 939 கோடியே 63 லட்சம் ரூபாயை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தபடி, வெள்ளச்சேத பகுதிகளைப் பார்வையிட, தமிழகத்திற்கு மத்தியக்குழு , கடந்த 26 ம்தேதி வந்தனர். . உள்துறை இணைச் செயலாளர் டி,வி.எஸ்.என். பிரசாத் தலைமையிலான 9 பேர் கொண்ட ஆய்வுக்குழு, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து. ஆலோசனை நடத்தினர். வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு, மத்திய அரசு உடனடியாக நிதியுதவி வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்தியக் குழுவை முதலமைச்சர் ஜெயலலிதா, கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளச் சேத பகுதிகளை மத்தியக் குழு, பார்வையிட்டார். மூன்றாவது நாளான நேற்று திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வடசென்னை பகுதிகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. வடசென்னை தண்டையார்பேட்டை பகுதியில் சேணியம்மன் கோயில் தெரு தொடக்கப்பள்ளி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து , மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தது. நிவாரண முகாமில் தங்கி இருந்த பொது மக்களையும் மத்திய குழுவினர் சந்தித்து பேசினார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் நிவாரண உதவிகள் பற்றி கேட்டறிந்தனர்.
நிவாரண முகாமில் தங்கி இருந்த மாரியம்மாள் மத்திய குழுவினரிடம் கூறுகையில், கைலாச முதலி தெருவில் குடியிருக்கிறோம். அங்கு வெள்ளம் புகுந்ததால் பள்ளியில் தங்க வைக்கப்பட்டோம். முதல்–அமைச்சர் வந்து எங்களை பார்த்தார். அதிகாரிகளும் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்தனர். இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் நாங்கள் வீடு திரும்பினோம். இனி மழை காலங்களில் வெள்ளம் தேங்காதவாறு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்றார்.
இதுபோல் அங்கு தங்கி இருந்த பல பெண்களும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். நிவாரண முகாமில் செயல்படும் மருத்துவ முகாமையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இளைய முதலி தெருவை பார்வையிட்டனர். அங்கு ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கழிவுநீர் லாரியை பார்த்ததும் அதன் செயல்பாடுகளை சிறிது நேரம் நின்று பார்வையிட்டனர். வ.உ.சி. நகர் சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கும் சென்று பார்வையிட்டனர்.
மழை வெள்ள நீர் அகற்றம் - அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த புகைப்படங்களை மத்தியக்குழு பார்வையிட்டது. மேலும், தண்டையார்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்ட மத்தியக் குழு, உணவு தயாரிப்பு முறைகளைக் கேட்டறிந்தது. அங்கு வழங்கப்பட்டு வரும் நிலவேம்பு குடிநீரை மத்தியக்குழுவினர் ஆர்வத்துடன் வாங்கி அருந்தினர்.
அதனைத் தொடர்ந்து, கைலாசன் தெரு, இளைய தெரு உள்ளிட்ட இடங்களில் வெள்ளச் சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர், அங்குள்ள மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அங்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி அமைக்கப்பட்டிருந்த நடமாடும் மருத்துவ முகாமில் அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
இதன்பின்னர் மத்தியக் குழு, கார்கில் நகர், சடையான் குப்பம், தட்டாமாஞ்சில் ஆகிய பகுதிகளை பார்வையிட்டது. அப்போது நிருபர்களிடம் பேசிய மத்திய குழுத் தலைவர் பிரசாத், தங்களது ஆய்வறிக்கையை ஒரே வாரத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.