முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டு தினத்தில் தெலுங்கானாவில் ரூ.200 கோடிக்கு மது விற்பனை!

சனிக்கிழமை, 2 ஜனவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

நகரி - ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தெலுங்கானாவில் ரூ.200 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. புத்தாண்டு தினத்துக்கு முன்தினம் இரவு தெலுங்கானாவில் ரூ.200 கோடிக்கு மேல் மது விற்பனையாகியுள்ளது.ஐதராபாத், செகந்திராபாத் நகரில் மட்டும் ரூ.120 கோடி மது விற்பனையானதாகவும், கடந்த ஆண்டை விட ரூ.50 கோடி அதிகம் என்றும் மது விற்பனையாளர்கள் கூறினர். இது ஒரு சாதனை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆந்திராவில் உள்ள அனைத்து பார்களும் நிரம்பி வழிந்தன. 31–ந்தேதி இரவு மட்டும் ஆந்திராவில் ரூ.100 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. அன்று ஒரு நாள் மட்டும் 2 லட்சம் பெட்டி மது விற்பனையாகி உள்ளது. ஆந்திராவைவிட தெலுங்கானா இன்னும் பல படி முன்னேறி இருந்தது. புத்தாண்டு கொண்டாட பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் ஐதராபாத் வந்து இருந்ததால் மது விற்பனை அதிகமாக இருந்ததாகவும் விற்பனையாளர்கள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்