எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தேர்தலில் சட்டவிரோத பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த சோதனை நடவடிக்கை, கண்காணித்தல், பணம் பறிமுதல் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:
* 2016 சட்டமன்றத் தேர்தலின்போது கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதையும் வாக்காளர்களை கவர்வதற்கான வாய்ப்பையும் தடுக்கும் நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியுள்ளது. பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ மூலமான கண்காணிப்பு போன்றவையும் இவற்றில் அடங்கும்.
* காவல்துறை மட்டுமின்றி, வருமான வரித்துறையின் விசாரணை இயக்குநரகம், சுங்கவரித் துறை போன்ற இதர அமைப்புகளும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நடைமுறையின்போதும் மதுபானம், போதைப் பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் சேமிப்பு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து வரும்படி மாநில கலால் வரித் துறையும் காவல்துறை அதிகாரிகளும் பணிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 4, 2016 தேதியிலிருந்து 702 பறக்கும் படைகள் மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றன. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலுமாக மொத்தம் 712 நிலைத்த கண்காணிப்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. சட்டவிரோதமான வகையில் பணம், மது மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது குறித்த புகார்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
* தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் குறித்த அதிகாரபூர்வமான அறிவிக்கை ஏப்ரல் 22, 2016 அன்று வெளியிடப்பட்டது. பணத்தைப் பயன்படுத்தி வாக்குகளைக் கவர்வதற்கான முயற்சிகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, வருமான வரித்துறையின் புலன்விசாரணை பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமலாக்கப் பிரிவுகளையும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது.
சோதனை மேற்கொள்வது, பறிமுதல் செய்வது போன்றவை உள்ளிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலம் முழுவதிலும் விரிவான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. * தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் 22, 2016 அன்று தமிழ்நாட்டில் உள்ள வருமான வரித்துறையின் புலன்விசாரணை பிரிவு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
புலன்விசாரணை பிரிவு உருவாக்கியிருந்த தகவல் தெரிவிக்கும் ஏற்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் மூலம் (சுமார்) ரூ. 5. 2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் வழக்கமான வணிக ரீதியான செயல்களுக்குத் தொடர்புடையதல்ல என்பதோடு, இதில் பெரும்பகுதியானது ஹவாலா நடவடிக்கைகளோடு தொடர்புடையது எனவும் சந்தேகிக்கப்படுவதோடு, இதில் பெரும்பகுதியானது வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
* அதே நாளில், அதாவது ஏப்ரல் 22, 2016 அன்று, முன்கூட்டியே பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வருமான வரித்துறையின் புலன்விசாரணை பிரிவு தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட ஒரு சோதனை நடவடிக்கையில் ரூ. 4.72 கோடி மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டது. வேட்டிகள், சேலைகள் போன்ற வாக்காளர்களை கவரும் நோக்கத்துடன் பதுக்கிவைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ரூ. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மதிப்புடைய பொருட்கள் இந்தப் பணம் கைப்பற்றப்பட்ட அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பொருட்களை வேறெங்கும் கொண்டு செல்லாதவாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
*மேலும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பறக்கும் படையானது ஏப்ரல் 22, 2016 அன்று இரு மாநில போக்குவரத்து பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த, எவ்வித ஆதாரமும் இன்றி பணத்தை வைத்திருந்த இரு பயணிகளிடமிருந்து ரூ. 1.35 கோடி பணம் கைப்பற்றியது.
* இதற்கு முன்பாக, மார்ச் 2016 -ல் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, பல்வேறு செலவுகளை கண்காணிக்கும் குழுக்களால் மொத்தம் ரூ. 35.66 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
தேர்தல் செயல்பாடுகள் நடைபெற்று வரும் காலத்தில் மாநிலம் முழுவதும் புலனாய்வு மற்றும் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்துமாறும், தேர்தல் நடைமுறையில் கணக்கில் வராத பணத்தை ஈடுபடுத்துவதற்கான முயற்சிகளை தடுத்து நிறுத்தும் வகையில் இதுபோன்ற சோதனை, பறிமுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்துமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. * பணம், மது, பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கடத்திச் செல்வது மிகக் கண்டிப்பான வகையில் கண்காணிக்கப்படும். வாக்காளர்களை கையூட்டின் மூலம் கவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இத்தகைய செயல்கள் அனைத்திலும் ஈடுபடுபவர்கள் மீது எவ்வித தயக்கமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமலாக்கப் பிரிவுகள் அனைத்திற்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் குழுக்களில் உள்ள எந்தவொரு உறுப்பினரும் பாரபட்சமாக நடப்பதை மிகவும் கடுமையாக கருதப்படும் என்பதோடு அத்தகைய தவறுகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* தேர்தலில் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சிகள் குறித்த தனது நடைமுறை உத்தியையும் தேர்தல் ஆணையம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன்படி, பறக்கும் படைகள், நிலைத்த கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பது; பறக்கும் படைகளில் மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த அலுவலர்களை இணைத்துக் கொள்வது; மத்திய காவல்படைப் பிரிவுகளின் அலுவலர்களையும் இவற்றில் இணைத்துக் கொள்வது ஆகிய நடவடிக்கைகளும் இவற்றில் அடங்கும்.
* இத்தகைய தயாரிப்பு நடவடிக்கைகளை பரிசீலிக்க மாநிலத்தில் சிறப்பு பார்வையாளர்களின் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதற்கான பார்வையாளர்கள் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் குழுக்கள், பறக்கும் படைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளில் தீவிர பங்கேற்பதற்காக இந்திய காவல் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பயிற்சி அலுவலர்களும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* நியாயமான முறையில் வாக்களிப்பதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ளும்படியும், நியாயமான வாக்குப்பதிவினை உறுதிப்படுத்த அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் மத்தியில் மட்டுமின்றி, வாக்காளர்கள் மத்தியிலும் ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. A
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச