முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் பரவலான மழை

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்-- கொடைக்கானலில் பரவலான மழை விவசாயிகள் மகிழ்ச்சி.

கொடைக்கானலில் கடந்த பல மாதங்களாக சரியான மழை பெய்யாததால் வறட்சியான நிலை ஏற்பட்டு இருந்தது. இந்த வறட்சியினால் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் கடும் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டது. கொடைக்கானல் நகர் பகுதிக்கு குடி நீர் வழங்கும் அணைகள் வறண்டன. இதனால் கொடைக்கானலில் 20 தினங்கள் முதல் 25 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சில பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடி நீர் சப்ளை செய்யப்பட்டது. இதனால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பரவலான மழை பெய்து வந்தது இதனை அடுத்து கொடைக்கானல் குடி நீர் அணைகள் ஓரளவு நீர் நிரம்பின. கொடைக்கானல் தாலுகா பகுதியில் முடங்கியிருந்த விவசாய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

கொடைக்கானலில் கடந்த இரு தினங்களாக 14 மி.மி அளவிற்கு மழை பதிவாகி உள்ளது. கொடைக்கானலில் பெய்த பரவலான மழைக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்