எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில். பாரத தேசத்தின் தென்திசையில் காவிரி பாய்ந்தோடும் ஈசான பாகத்தில் அமைந்திருக்கும் கண்ணனூர் என்னும் சமயபுரத்தில் வீற்றிருக்கும் ஆயிரம் கண்ணுடையாள் என்று அழைக்கப்படும் அருள்மிகு மாரியம்மன், கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறாள். வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பாலித்து கருணை மழை பொழிந்து பூவின் மணமாகவும் பழத்தின் சுவையாகவும் கருணை கடலாகவும் யாவராலும் துதித்து தீராத நோய்களையும் தீவினைகளையும் தீர்த்து அருளும் கருணை உள்ள கொண்டு திகழ்ந்து வருகிறாள். தேவீ மஹாத்மியத்தில் 'சைவகாலே மஹா காளி மஹாமாரி ஸ்வரூபையா" என்று சொன்னவாறு பிரபஞ்சத்தை தோற்றுவித்து ரட்சித்து லயப்படுத்திக் கொண்டுள்ளாள். இந்த பராசக்தியே மாராசூரனை சம்ஹரிக்க மஹாமாரி வடிவம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இப்படி வேண்டுவோர்க்கு வேண்டிய வரும் தரும் சக்தி வாய்ந்த தளமாக உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிமல் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். சபரி மலை, பழனி, வேளாங்கன்னி, மேல்மருவத்தூர், திருப்பதி போன்ற ஆலயங்களுக்கு சுற்றுலா செல்வோர் இங்கும் வந்து செல்கின்றனர். மேலும் கருர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கிளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மஞ்கள் உடையணிந்து மாரியம்மனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வேப்பிலை கையிலேந்தி பாதயாத்திரையாக வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொறிதல் விழா, சித்திரை மாதம் தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் மிக சிறப்பாக நடைபெறும்.
பங்குனி மாதம் பிறந்தவுடன் ஒவ்வொரு திங்கள் கிழமையும் பூச்சொறிதல் விழா நடைபெறும் அப்போது பல மாவட்டங்களில் இருந்தும் அம்மனை பூக்களால் அலங்கரித்து மேள தாளம், வாணவேடிக்கை, பாரம்பரிய தப்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டத்துடன் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வருவர். 5வாரம் பூச்சொறிதல் விழா முடிந்து சித்திரை பிறந்து முதல் செவ்வாய் கிழமை சித்திரை தேரோட்டம் நடப்பது வழக்கம். தேரோட்ட காலத்தில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி, பால்குடம் எடுத்து மேள தாளத்துடன் சென்று அம்மனை வழிபடுவர். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வந்து இரவு கோவில் வளாகத்தில் தங்கி அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றால் நினைத்த காரியங்கள் கை கூடும் என்பது நம்பிக்கை. எனவே அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் வசதிக்காக நாமக்கல், பெரம்பலூர், துறையூர், திருச்சி ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்;துகள் இயக்கப்பட்டு வருகிறது. அம்மை போன்ற தீராத நோய்களால் பாதித்தவர்கள் இங்கு வந்து தங்கி சென்றால் பூரண குணமாகும் என்பது ஐதீகம். எனவே பலர் வந்து தங்கி செல்கின்றனர்.ம எனவே சமயபுரம் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இப்படி சிறப்பு வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. சம்பிராதாயப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிN~கம் நடத்தப்படவேண்டும். அதன்படி சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. அரசு ஒதுக்கிய நிதி மற்றும் நன்கொடையாளர்கள் கொடுத்த நிதி உதவியுடன் பலகோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இருந்து வந்த கோவில் வளாகம் தற்போது நன்கொடையாளர்களால் கிரயம் பெற்று ஒப்படைக்கப்பட்ட சுமார் 22 ஏக்கர் நில பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டு அங்கு முடி மண்டபம், குளியல் வசதிகள் உள்பட பல்வேறு கட்டமைப்புகள் மிகவும் பிரமாண்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அங்கிருந்த பெருவளை வாய்க்காலையே அப்புறப்படுத்தி திருப்பி விடப்பட்டுள்ளது.
கோவிலின் கிழக்கு பகுதியில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது. மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டுள் ளன. கோவில் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடந்து வருவதாலும், பாலாலயம் நடந்து 6 மாதங்கள் முடிந்து விட்டதாலும் பக்தர்களின் வழிபாட்டு நலன் கருதி கோவில் கும்பாபிசேகத்தை விரைவில் முடிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கையின் விளைவாக வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி கும்பாபிசேகம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. எனவே கிழக்கு வாசல் ராஜகோபுரம் தவிர மற்ற கோபுரங்கள், மூலஸ்தான விமானம மற்றும் அனைத்து சன்னதி விமானங்களுக்கும் வருகிற 6ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கும்பாபிN~கம் நடைபெறுகிறது.
இதற்காக யாகசாலை பூஜைகள் 3ஆம் தேதி தொடங்கியது. கும்பாபிசேகத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு, அடிப்படை வசதிக்காக மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவின் படி சமயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு வசதிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக 4 இடங்களில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் பணி, வாகனங்கள் நிறுத்துமிடம், கழிவறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிசேக விழா ஏற்பாடுகளை இணைஆணையர் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் புதிய உச்சம்: மின் நுகர்வு 45 கோடி யூனிட்டை தொட்டது
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் தினமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு முன் எப்போதும் இல்லாததை விட புதிய உச்சத்தை தொட்டது.
-
ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்
28 Apr 202410 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
28 Apr 2024லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
மணிப்பூரில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
28 Apr 2024இம்பால், மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் ஜா தெரிவித்து உள்ளார்.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...