முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைஞாயிறு ஓன்றிய பகுதிகளில் பொதுப்பணித்துறையின் சார்பில் நடைபெற உள்ள பணிகள் : கலெக்டர் பழனிசாமி நேரில் பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் பொதுப்பணித்துறையின் சார்பில் நடைபெற உள்ள பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

தலைஞாயிறு ஒன்றியம் தலைஞாயிறு 5ம் சேத்தி நீர்தேக்கத்திற்க்கு ஏரி அமைவதற்க்கான அளவீடு பணிகளையும், நல்லார் (வாட்டாக்குடி) உப்பு நீர் உள்ளே வருவதை தடுக்க கள்ளிமேடு அடப்பாற்றின் குறுக்கே ஆசிய வங்கி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை செயல்படுத்தப் படஉள்ளன. இந்த தடுப்பணை கட்டப்படுவதன் மூலம் உப்பு நீர் உள்ளே புகுவது தடுக்கப்படும்.

முதலியப்பன்கண்டி அரிச்சந்திரா நதியின் குறுக்கே புதிய கடைமடை அணை ஆசிய வங்கி வளர்ச்சி திட்டத்தின் கீழ்; ரூ.10 கோடி மதிப்பீட்டிலும், காரப்பிடாகை தெற்கு அலத்தில் புதிய ஏரி அமைப்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் சங்கர், வட்டாட்சியர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்