எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று (24.04.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்; 549 மனுக்கள் பெறப்பட்டது என மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர். முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியிலிருந்து பல்வேறு விபத்துகளில் இறந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா 1 இலட்சம் வீதம் 15 இலட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையினையும், 36 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும், 02 நபர்களுக்கு விதவை உதவித்தொகையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு ரூபாய் 86 ஆயிரத்திற்கான திருமண உதவித் தொகையினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 02 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியினையும், 2014-2015ஆம் ஆண்டு சிறந்த சேவை புரிந்தமைக்காக மணப்பாறை வட்டம் இடையப்பட்டியான்பட்டி கிராமம் ‘நேரு இளைஞர் நற்பணி மன்றம்’ தேர்வு செய்யப்பட்டு மன்றத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், 2015-2016 ஆம் ஆண்டு சிறந்த சேவை புரிந்தமைக்காக திருச்சி புதுவை நகர் பகுதியில் உள்ள ‘டாக்டர்.அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம்’ தேர்வு செய்யப்பட்டு மன்றத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றினையும், மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட நலப்பணி நிதிக்குழுவிலிருந்து பழனி தைப்பூச திருவிழாவிற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருவரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் 7463 ஒளிரும் பட்டைகள் தயார் செய்து விநியோகம் செய்யப்பட்டது அதற்கான தொகை ரூபாய் 37 ஆயிரத்து 315 க்கான காசோலையும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லையில் உள்ள 19 மையங்களில் சிகிச்சை பெற்று வரும் 227 காசநோயாளிகளுக்கு தினந்தோறும் முட்டைகள் வழங்க மாதம் ஒன்றுக்கு ரூபாய் 40 ஆயிரம் வீதம் மூன்று மாதங்களுக்கான தொகை ரூபாய் 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மரக்கன்றுகளை நடுவதை ஊக்கப்படுத்தும் விதமாகவும், நீதிமன்ற ஆணையின்படி அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்கள் இருந்த இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்திடவும், மாவட்ட நலப்பணி நிதிக்குழு சார்பில் ரூபாய் 26 ஆயிரத்து 240க்கு 3280 மரக்கன்றுகள் கொள்முதல் செய்வதற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட நலப்பணி நிதிக்குழு சார்பாக திருச்சிராப்பள்ளி கீழதேவதானம் பத்மாவதி என்பவரது மகன் (வயது17) விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டு நடக்கமுடியாமல் உள்ளதால் அவரின் மருத்துவ உதவியாக ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையும், திருச்சிராப்பள்ளி ஜீவா நகரை சேர்ந்த மாணவி உமாமகேஷ்வரி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1073 மதிப்பெண்கள் பெற்று தற்பொழுது பி.காம் முதலாமாண்டு படிக்க கல்வி நிதியுதவியாக ரூபாய் 5 ஆயிரத்திற்கான காசோலையும், இலால்குடி வழுதியூர் கிராமத்தை சேர்ந்த மாணவி மிரோஸிலின் மோனிகா இளங்கலை இயற்பியல் பிரிவில் முதலாமாண்டு படிக்க கல்வி உதவித்தொகை ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவன் கோகுல் என்பவருக்கு ரூபாய் 7 ஆயிரத்திற்கான பரிசுத்தொகையினையும், 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவன் முகேஸ்வரன் என்பவருக்கு ரூபாய் 10 ஆயிரத்து 500க்கான பரிசுத் தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 44 பயனாளிகளுக்கு ரூபாய் 19 இலட்சத்து 12 ஆயிரத்து 55 மதிப்பில் நலத்திட்டங்களை மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.