முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாநகராட்சியில் புதிய பூங்கா அமைப்பதற்காக பூமி பூஜை விழா பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புதூர் அ. நடராஜன் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 7 ஜூன் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60வது வார்டு தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில்  புதிய  பூங்கா அமைப்பதற்காக பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர்  கரைப்புதூர் அ. நடராஜன்  தலைமையில் பூமி பூஜை விழா நடைபெற்றது.

பூங்காக்கள் 

திருப்பூர் மாநகராட்சி 60வது வார்டு பொது மக்களின் பொழுது போக்கிற்காக பூங்காக்கள் அமைக்கப்படுகின்றது. 60 வது வார்டில் இரண்டு புதிய பூங்காக்கள் தலா ரூ.55 இலட்சம் மதிப்பில் அமைக்கப்படுகின்றது.  இப்பூங்காவிற்கான பணிகள் ஹஅசரவ (அம்ரூட்) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது.

அனைத்து வசதிகளுடன்

இப்பூங்காவில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, நடைப்பயிற்சி பாதை , விளையாட்டு உபகரணங்கள் என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இப்பூங்காவை பொது மக்கள் நல்ல முறையில் பேணி பாதுகாத்துக் கொள்ளுமாறு பொது மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனக் கூறினார். இவ்விழாவில்  உதவி ஆணையர்   சி.கண்ணன்  இளம் பொறியாளர் திருநாவுக்கரசு உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து