எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.14-கால்நடை அமைச்சராக பதவி ஏற்றவுடன் எனக்கு முதல்வரின் பெயரில் உள்ள அறக்கட்டளையில் பேச வாய்ப்பு கிடைத்தற்கு பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கால்நடைதுறை அமைச்சர் சின்னையா பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழக விவசாயிகளின் வாழ்வோடும் வளத்தோடும் பின்னிப் பிணைந்திருப்பது கால்நடை வளர்ப்பாகும். பலவித இடையூறுகளால் விவசாயம் சரிவர நடக்காத காலங்களில் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுப்பதும், விளைச்சல் நல்லபடியாக இருக்கும்போது கூடுதல் வருமானம் ஈட்டு தருவதும் கால்நடைகளே. கால்நடை உற்பத்தித் தொழில் சிறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயிகளின் கையில் உள்ளது. அதிலும் குறிப்பாக கால்நடை வளர்ப்பில் பெண்களே தொடர்ந்து சிறப்பான பங்கு வகிக்கிறார்கள். எனவே, தமிழக கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்தில் கால்நடை வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. இனி வரும் காலங்களில் விவசாயத் துறையில் எட்ட வேண்டிய வளர்ச்சியில் தற்போது 37 விழுக்காடுகள் அளவில் உள்ள கால்நடை மற்றும் மீன் வளர்ப்பின் பங்களிப்பு 50 விழுக்காடுகளுக்கு மேல் அதிகரிக்குமென கருதப்படுகிறது. ஆகவே, கால்நடை வளர்ப்பில் தேவையான முன்னேற்றத்தை அடைய புதிய தொழில்நுட்பங்கள், புதிய கால்நடை மற்றும் கோழியின ரகங்கள், சிறந்த மேலாண்மை முறைகள், தீவன முறைகள், நோய் தடுப்பு முறைகள் போன்றவை அவ்வப்போது கால்நடை வளர்ப்போரை சென்றடைய வேண்டும். ஆகவே முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு கால்நடை வளர்ப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து முனைப்பாக செயல்பட்டு வருகிறது. பால் உற்பத்தியில் இரண்டாவது வெண்மை புரட்சியை உருவாக்க வறுமையில் வாடும் 60,000 குடும்பங்களுக்கு கறவை மாடுகளும் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 7 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு, குறிப்பாக விவசாய கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகளும் வழங்க ஆணையிட்டு அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் அன்று இத்திட்டம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திருவள்ளூரில் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பால் மற்றும் கோழியின துறைகளில் மிக வேகமான வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தேவைப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா 2011-2012 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஆகிய இரு இடங்களில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என்று அறிவித்து அதற்கான அரசாணைகளும் ஏற்படுத்தி நிதி ஒதுக்கியுள்ளார். மேலும், முதல்வர் ஜெயலலிதா, கோழியின உற்பத்தி மேலாண்மையில் உயர்தர ஆராய்ச்சி மேற்கொள்ளும் பொருட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நவீன கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையம் ஒன்றையும் அறிவித்துள்ளார்.
பசுந்தீவனங்களின் பற்றாக்குறை, கறவை மாடுகளில் பால் உற்பத்தி திறன் குறைவதற்கும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. தமிழ்நாட்டில் பசுந்தீவன பற்றாக்குறை 20 விழுக்காடாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே அரசு பசுந்தீவன உற்பத்தியை மேம்படுத்த 24,000 ஏக்கரில் பசுந்தீவன வளர்ப்பிற்கு சிறப்புத் திட்டம் ஒன்றை தொடங்கவும் இந்த ஆண்டு நிதி ஒதுக்கியுள்ளது.
மேலும் மனித மருத்துவத்திற்கு இணையான சிகிச்சைகள் கால்நடைகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். இதற்காக கால்நடை மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இத்தகைய அனைத்து வசதிகளையும் கால்நடைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த முதல்வர் ஜெயலலிதா, அவர் பெயரில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி சொற்பொழிவுகளை நடத்தி வருவது மிகவும் பொருத்தமான ஒன்று. மேலும் இந்த வருடம் இந்த சொற்பொழிவை நிகழ்த்த வந்திருப்பவர் மத்திய அரசின் திட்டக்குழுவின் வேளாண்மை ஆலோசகர் முனைவர் வி.வி.சதாமத்தே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய தேவையான `கால்நடை உற்பததியை பெருக்குவதற்கான விரிவாக்க வழிமுறைகள்' என்ற தலைப்பில் இந்த சொற்பொழிவு அமைந்திருப்பது இன்னும் சிறப்பானதாகும். நமது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமது விரிவாக்கப் பணிகளை, மாவட்ட அளவில் 15 பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், 3 உழவர் பயிற்சி நிலையங்கள், 3 வேளாண் அறிவியல் நிலையங்கள், ஒரு மண்டல ஆராய்ச்சி நிலையம், ஒரு சிறிய அசைபோடும் பிராணிகள் ஆராய்ச்சி மையம், ஒரு கோழியின ஆராய்ச்சி நிலையம் மற்றும் 4 ஆராய்ச்சி பண்ணைகள் அமைத்து, கால்நடை, கோழி மற்றும் மீன்தொழில் பண்ணையாளர்களுக்கு புதிய தொழில் நுட்பங்களை இலவச பயிற்சிகள், ஆலோசனைகள், வானொலி பள்ளிகள், தொலைநிலைக் கல்வி, செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள் வாயிலாக தொடர்ந்து வழங்கி வருகிறது.
மேலும் இப்பல்கலைக்கழகம் கால்நடை பராமரிப்பு துறை, ஆவின், மீன்வளத்துறை மற்றும் அனைத்து கால்நடை சார்ந்த துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவது மிகுந்த பாராட்டுதலுக்கு உரியதாகும். இந்த சொற்பொழிவு பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பராமரிப்பு, ஆவின் போன்ற துறைகள் இன்னும் சிறப்பாக செயல்பட உதவும் என்று கூறி இந்த அருமையான அறக்கட்டளையை ஏற்படுத்திய `பெரியக்காள்- பரமசிவம்' குடும்பத்தினரை வாழ்த்தி, இதனை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தினையும் பாராட்டுகிறேன். அமைச்சராக பதவியேற்ற பின் எனது முதல் பல்கலைக்கழக நிகழ்ச்சியே முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சி என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி அமைகிறேன்.
இவ்வாறு டி.கே.எம்.சின்னைய்யா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச